Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி டெஸ்ட் போட்டி: இந்தியா 205/2!!

Webdunia
சனி, 2 டிசம்பர் 2017 (13:37 IST)
டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் மூன்றாம்   டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 
 
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனது. 
 
2 வது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
 
இந்நிலையில் இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. துவக்க வீரர்களாக ஷிகர் தவானும், முரளி விஜயும் களமிறங்கினர். 
 
தவான் 23 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் முரளி விஜயுடன் புஜாரா இணைந்தார். அவரும் தனத் விக்கெட்டை பறிகொடுக்க கோலி, விஜயுடன் இணைந்து விளையாடி வருகிறார்.
 
47 ஓவர்களின் முடிவில் முரளி விஜய் 80 ரன்களுடனும், விராட் கோலி 76 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 2 விக்கெட் இழந்து 205 ரன்கள் குவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

அடுத்த கட்டுரையில்
Show comments