Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி டெஸ்ட் போட்டி: இந்தியா 205/2!!

Webdunia
சனி, 2 டிசம்பர் 2017 (13:37 IST)
டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் மூன்றாம்   டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 
 
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனது. 
 
2 வது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
 
இந்நிலையில் இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. துவக்க வீரர்களாக ஷிகர் தவானும், முரளி விஜயும் களமிறங்கினர். 
 
தவான் 23 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் முரளி விஜயுடன் புஜாரா இணைந்தார். அவரும் தனத் விக்கெட்டை பறிகொடுக்க கோலி, விஜயுடன் இணைந்து விளையாடி வருகிறார்.
 
47 ஓவர்களின் முடிவில் முரளி விஜய் 80 ரன்களுடனும், விராட் கோலி 76 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 2 விக்கெட் இழந்து 205 ரன்கள் குவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments