Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைய போட்டிக்கு முன்பே அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா: எப்படி?

Webdunia
ஞாயிறு, 6 நவம்பர் 2022 (09:49 IST)
இன்று இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டி நடைபெறும் முன்னரே இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. 
 
இன்று காலை அடிலெய்ட் மைதானத்தில் தென்னாபிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் அடித்தது
 
இதனை அடுத்து 159 என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது
 
தென் ஆப்பிரிக்க அணியின் இந்த தோல்வி காரணமாக அந்த அணி மொத்தம் ஐந்து புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்திய அணி 6 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தில் இருப்பதால் இந்தியா அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடதக்கது
 
மேலும் இன்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அணியும் அரை இறுதிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

ஜெய்ஸ்வால் உள்ளே வந்தால் பேட்டிங் வரிசை குழம்பிவிடும்… முன்னாள் வீரர் கருத்து!

கேப்டன்சியை ஏற்காமல் ஷாகீன் அப்ரிடிக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டும்- பாபர் ஆசாம் குறித்து ஷாகித் அப்ரிடி விமர்சனம்!

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments