Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற இந்தியா பவுலிங்; அனல் பறக்க களமிறங்கும் ஆஸ்திரேலியா

Webdunia
சனி, 7 அக்டோபர் 2017 (19:05 IST)
இந்திய ஆஸ்திரேலிய அணிகள் இடையே ராஞ்சியில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.


 

 
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் அஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முடிவடைந்த பின் தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் விளையாடி வருகிறது. முதலாவது ஒருநாள் போட்டி இன்று ராஞ்சியில் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது.
 
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்திய அணியில் அக்ஸருக்கு பதில் குல்தீப் இடம்பெற்றுள்ளார். ஒருநாள் போட்டியில் விலகி இருந்த தவான் தற்போது டி20 போட்டியில் களமிறங்கியுள்ளார்.
 
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் காலை திடீரென தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகிக்கொண்டார். இதையடுத்து டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணியை வழி நடத்த உள்ளார்.
 
ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டி20 போட்டியிலும் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தும் என் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments