Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி; 50% ரசிகர்களுக்கு அனுமதி

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (16:02 IST)
சென்னையில் பிப்ரவரி 13 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தியா -  இங்கிலாந்து இடையிலான 2 வது டெஸ்ட் போட்டியில் 50% ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா – இங்கிலாந்து தொடரை காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

கொரோனா காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த மாதம் வரை தமிழகத்தில் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான தளர்வுகளில் விளையாட்டு மைதானங்களில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த தளர்வால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் தொரை காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனினும் டெஸ்ட் தொடர் அனுமதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அதில், சென்னை சேப்பாக்கத்தின் நடைபெறவுள்ள இங்கிலாந்து – இங்கிலாந்து இடையேயான2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியைக் காண  சுமார் 50% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிச்சி அடைந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments