Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேச அணிக்கு மரண அடி கொடுத்த ரோஹித் சர்மா! 15 ஓவர்களில் முடிந்த மேட்ச்

Webdunia
வியாழன், 7 நவம்பர் 2019 (22:21 IST)
உலகின் சிறந்த கிரிக்கெட் அணியாகவும், தொடர் வெற்றி பெற்று வரும் அணியாகவும் இருந்து வரும் இந்திய கிரிக்கெட் அணியை கடந்த 3ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் வங்கதேச அணி துள்ளி குதித்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா, அந்த அணிக்கு மரண அடி கொடுத்தார்.
 
வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 154 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. ரோஹித் சர்மார் ருத்ரதாண்டவம் ஆடி, 43 பந்துகளில் 85 ரன்கள் அடித்தார். இதில் 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனையடுத்து தவான் 31 ரன்களும், கே.எல்.ராகுல் 8 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 24 ரன்களும் எடுக்க இந்திய அணி 15.4 ஓவர்களில் 154 என்ற இலக்கை எட்டியது. முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, அதே ஆத்திரத்தில் இன்று வங்கதேச அணியை புரட்டி எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments