Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 மணி வரை கெடு கொடுத்த அம்பயர்: அதற்கு பின் அரையிறுதி என்ன ஆகும்?

Webdunia
செவ்வாய், 9 ஜூலை 2019 (19:52 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அரையிறுதி போட்டி நடைபெற்று கொண்டிருந்த நிலையில் திடிரென மழை குறுக்கிட்டது. மான்செஸ்டர் நேரப்படி சரியாக மதியம் 2 மணிக்கு மழை தொடங்கியது. தற்போது அங்கு மதியம் 3.20 ஆகின்றது. 
 
மான்செஸ்டரில் இன்னும் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதால் மாலை 4 மணி வரை அம்பயர் கெடு கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு பின் அம்பயர் தனது முடிவை அறிவிப்பார் என தெரிகிறது
 
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி அல்லது இறுதி போட்டியின்போது மழை பெய்தால் ரிசர்வ் டே' என்று கூறப்படும் அடுத்த நாளில் போட்டி நடைபெறும். அவ்வாறு நடைபெறும்போது முதலில் இருந்து போட்டி தொடங்காமல் முந்தைய நாள் விட்ட இடத்தில் இருந்து தொடங்கும். அதாவது இன்று 46.1 ஓவரில் போட்டி நிறுத்தப்பட்டதால் நாளை 46.2வது ஓவரில் இருந்து போட்டி தொடங்கும். 
 
ஆனால் நாளையும் மழை பெய்து போட்டிக்கு தடங்கல் ஏற்பட்டால் லீக் போட்டிகளில் அதிக புள்ளிகள் எடுத்துள்ள இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments