Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி 20 போட்டியை எங்கு நடத்துவது… பிசிசிஐக்கு காலெக்கெடு விதித்த ஐசிசி!

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (08:13 IST)
டி 20 உலகக்கோப்பை தொடரை இந்தியாவில் நடத்துவது குறித்து முடிவெடுக்க பிசிசிஐக்கு இம்மாதம் 28 ஆம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் டி 20 உலகக்கோப்பை இந்தியாவில் நடக்க இருந்தது. ஆனால் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு மற்றும் மூன்றாவது அலையின் அறிகுறிகள் ஆகியவற்றால் இந்தியாவில் நடத்துவது சாத்தியம்தானா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த மாதம் இந்தியாவில் நடந்த ஐபிஎல் தொடர் வீரர்களின் கொரோனா பாதிப்புக் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டதும் இந்த அச்சத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இது சம்மந்தமாக முடிவெடுக்க இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு இம்மாதம் 28 ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. மாற்று இடமாக உலகக்கோப்பை தொடரை நடத்த ஐக்கிய அரபுகள் எமிரேட்ஸ் தேர்வு செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அடுத்த கட்டுரையில்
Show comments