Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வியால் அணியில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம்; கங்குலி அறிவுரை

Webdunia
ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (19:52 IST)
இங்கிலாந்து அண்இக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய தோல்வியடைந்தை அடுத்து அணி எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என்று முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை கூறியுள்ளார்.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
 
இதுகுறித்து முன்னாள் கேப்டன் கங்குலி கூறியதாவது:-
 
இந்திய அணி தோல்விக்கு கேப்டன் விராட் கோஹ்லியை குறை சொல்ல முடியாது. அணி வெற்றி பெற எல்லோரும் ரன் குவிக்க வேண்டும். முரளி, ரஹானே ஆகியோருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்க வேண்டும்.
 
முதல் போட்டியில் தோல்வி அடைந்ததால் அணியில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். அணியில் உள்ள வீரர்கள் பெரும்பாலும் எல்லா தரப்பு போட்டியிலும் விளையாட வேண்டும்.
 
கேப்டன் அணி வீரர்களுடன் அமர்ந்து பேசி, அவர்களை எந்த பயமும் இல்லாமல் போய் விளையாடு என்று சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நிக்கோலஸ் பூரன் பேயாட்டம்… மும்பை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த லக்னோ!

MIvsLSG: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments