Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழ்நாளில் பேட்டையோ பந்தையோ தொடாதவர்கள் கிரிக்கெட் நடத்துகிறார்கள் - அசாரூதின்

Webdunia
திங்கள், 8 ஜனவரி 2018 (13:31 IST)
கிரிக்கெட்டை பற்றி தெரியாத இவர்கள் கிரிக்கெட் அமைப்பை நடத்துகிறார்கள் என்றும் அவர்கள் வாழ்நாளில் ஒருமுறை கூட பந்தையோ பேட்டையோ தொட்டது இல்லை என்றும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாரூதின் குற்றம்சாட்டியுள்ளார்.

 
ஐதராபாத்தில் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கிரிக்கெட் சங்க சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துக்கொள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாரூதின் வந்தார். ஆனால் அவரை ஒருமணி வெளியே காத்திருக்க வைத்து பின்னர் உள்ளே அனுமதித்துள்ளனர். கூட்டம் நிறைவடைந்த பின் செய்தியாளர்களை சந்தித்தவர் கூறியதாவது:-
 
போட்டிகளில் விளையாட லட்சக்கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என வீரர்கள் புலம்புகிறார்கள். ஆசை மற்றும் கற்பனைகளால் நீங்கள் ஒரு நிறுவனத்தை இயக்க முடியாது. இந்த அமைப்பு 1932ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது. வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களை அதிகரிக்க எனது உறுப்பினர் சேர்க்கைக்கு மற்ற உறுப்பினர் ஆதரவு சேவை.
 
கிரிக்கெட்டை பற்றி தெரியாதவர்கள் கிரிக்கெட் அமைப்பை நடத்துகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறை கூட பேட்டையோ, பந்தையோ தொட்டது இல்லை. எனது உறுப்பினர் சேர்க்கைக்கு மற்ற உறுப்பினர்கள் உதவி செய்தால் நான் உங்கள் பிரச்சனையை தீர்த்து வைப்பேன் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறுதிப் போட்டியைக் காண இந்தியா வரும் இரண்டு வெளிநாட்டு ஜாம்பவான்கள்!

கோலிக்கு சொந்தமான மதுபான விடுதி மேல் வழக்குப் பதிவு… பின்னணி என்ன?

யார் தோற்றாலும் நமக்குதான் ‘ஹார்ட் பிரேக்’… இறுதிப் போட்டி குறித்து ராஜமௌலி பதிவு!

வாலிபால் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா.. தேசிய கொடியை ஏந்தி கொண்டாட்டம்..!

கோப்பையை வென்றால் கோலி ஓய்வை அறிவிக்கக் கூடாது… ஐபிஎல் தலைவர் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments