Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி மனைவி மீது கோடிக்கணக்கில் மோசடி புகார்!

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2016 (18:48 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்‌ஷி பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

 
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் மகேந்திர சிங் டோனியின் மனைவி சாக்‌ஷி. ஹரியானாவைச் சேர்ந்த டெனிஷ் அரோரா என்பவர், சாக்‌ஷி தோனி மீது பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறி டெல்லியில் உள்ள சுசந்த் லோக் காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 
அந்த புகாரில் சாக்‌ஷி, ரிதி எம்.எஸ்.டி. அல்மோட் [Rhiti MSD Almode Pvt. Ltd] என்ற உடற்பயிற்சி நிறுவனத்தில் பங்குதாரராகவும் இயக்குநராகவும் இருந்ததாகவும், இதில் சாஷிக் டோனி, அருன் பாண்டே, சுபவதி பாண்டே, பிரதீமா பாண்டே ஆகியோர் பங்குதார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.
 
இதில் ஒப்பந்த தொகையாக 11 கோடி ரூபாய் தருவதாக பேசப்பட்டதாகவும், ஆனால் இவர்கள் நிறுவனம் சார்பில் கடந்த மார்ச் 31ஆம் தேதி வரையிலும் 2.25 கோடி ரூபாய் மட்டுமே தான் தந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இதனால் மீதித் தொகையை கேட்டு டெனிஷ் அரோரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், கம்பெனி செலுத்த வேண்டிய பங்கினை அரோராவிற்கு கொடுக்கப்பட்டுவிட்டதாக அருண் பாண்டே கூறியுள்ளார்.
 
மேலும் பாண்டே கூறுகையில், தோனியின் மனைவியான சாஷி இந்நிறுவனத்தின் பங்கு தாராராக இருந்து விலகி ஒரு வருடம் ஆன நிலையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்வது இயலாது என்று கூறியுள்ளார். இது விளையாட்டு உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments