Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலிறுதிப் போட்டியில் கொலம்பியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி

Webdunia
சனி, 5 ஜூலை 2014 (10:46 IST)
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் 2-1 கோல்கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின. இதில் 2 ஆவது காலிறுதி போட்டியில் பிரேசில் - கொலம்பியா அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கிய 7ஆவது நிமிடத்தில் பிரேசில் வீரர் சில்வா முதல் கோலை அடித்தார். இதனால் முதல் பாதிவரை பிரேசில் 1-0 கோல்கணக்கில் முன்னிலை வகித்தது.

2 ஆம் பாதியில் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த கொலம்பியா வீரர்கள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளைத் தவறவிட்டனர். ஆட்டத்தின் 69 ஆவது நிமிடத்தில் பிரேசில் வீரர் டேவிட் லூயில் தனது அணியின் 2 ஆவது கோலை அடித்தார்.

ஆட்டநேர இறுதிவரை போராடி கொலம்பியா அணியால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. ஆட்ட நேர முடிவில் பிரேசில் 2-1 கோல்கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

Show comments