Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட பிரபல நடிகர் கைது

Webdunia
சனி, 2 ஜூன் 2018 (15:23 IST)
சல்மான் கானின் தம்பியும், பாலிவுட் நடிகரும் மற்றும் தயாரிப்பாளருமான அர்பாஸ்கான் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.
ஐபிஎல் சூதாட்டத்தை தடுக்க சமீபத்தில் மும்பை போலீசார்  சூதாட்ட கும்பலின் தலைவன் சோனு ஜலான் என்பவனை கைது செய்தனர். 
 
அவனிடம் கைப்பற்றிய டைரியில், ஐபிஎல் சூதாட்டத்தில் பல பிரபலங்கள் ஈடுபட்டது தெரியவந்ததாகவும், அவர்களில் ஒருவர் பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அர்பாஸ்கான் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து மும்பை போலீசார் நடிகர் அர்பாஸ்கானை விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பினர். போலீஸாரிடம் இன்று நேரில் ஆஜரான அர்பாஸ்கான்,  ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். சூதாட்டத்தில் 2.75 கோடி ரூபாயை இழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட உள்ளார்.
 
போலீஸார் கைப்பற்றிய டைரியில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் பலரது பெயரும் இடம்பெற்றுள்ளதாக, வழக்கை விசாரித்து வரும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்தியா கனடா போட்டியும் மழையால் பாதிக்கப்படுமா?… வானிலை அறிக்கை என்ன சொல்கிறது?

கோலி மட்டுமா யாருமே அந்த மைதானத்தில் ரன்கள் சேர்க்கவில்லை- ஆதரவுக் குரல் தெரிவித்த முன்னாள் பயிற்சியாளர்!

கோலியைப் பற்றி பேச நான் யார்… அவர் மூன்று போட்டிகளில் ரன் அடிக்கவில்லை என்றால்…? –ஷிவம் துபே பதில்!

டி20 போட்டியில் உகாண்டா அணி படுதோல்வி.! ஐந்தே ஓவரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து..!!

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்… பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைக் கலாய்க்கும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments