Webdunia - Bharat's app for daily news and videos

Install App

45 ரன்களில் ஆல்-அவுட்: மேற்கிந்திய தீவுகள் அணியின் பரிதாபம்

Webdunia
சனி, 9 மார்ச் 2019 (08:55 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருவது தெரிந்ததே. தற்போது நடைபெற்று வரும் டி20 தொடரில் ஏற்கனவே முதல் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது
 
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியிலும் இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 11.5 ஓவர்களில் 45 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
 
முன்னதாக முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 182 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 87 ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீர்ர் சாம் பில்லிங்ஸ் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.
 
இந்த வெற்றியால் இங்கிலாந்து அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை வென்ற நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி டி20 போட்டி வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

157 ரன்களில் பஞ்சாபை சுருட்டிய RCB! சேஸ் செய்து பாஸ் செய்யுமா? பரபரப்பான Second Half!

மும்பைல கூட சிஎஸ்கே வந்தா ஸ்டேடியம் மஞ்சள் படைதான்..! - ஹர்திக் பாண்ட்யா ஆச்சர்யம்!

RCB vs PBKS: டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சு தேர்வு.. ப்ளேயிங் லெவனில் யார் யார்?

மூன்று முக்கிய டீம்களுமே ஒரே நாள்ல.. இப்பவே கண்ணக் கட்டுதே! - CSK vs MI, PBKS vs RCB என்ன நடக்க போகுதோ?

அதிவேக சிக்ஸர்கள்.. தோனி, கோலி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments