Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...

Webdunia
வெள்ளி, 16 மார்ச் 2018 (17:50 IST)
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர் வீராங்கணைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு புல்லேலா கோபிசந்த் நடத்தும் பேட்மின்டன் அகாடமிக்கு சேரும்.
 
இந்த அகாடமி தெலங்கானாவில் உள்ளது. இங்குதான் சாய்னா நேவால், பிவி சிந்து, கிடம்பி ஸ்ரீகாந்த், காஸ்யப், பினராய் விஜயன், சமீர் வெர்மா ஆகியோர் பயிற்சி பெற்றனர். 
 
இந்நிலையில், அடுத்த ஒலிம்பிக் போட்டி 2020 ஆம் ஆண்டில் ஜப்பானில் நடக்கவுள்ளது. இந்த போட்டியில் சாதிக்க வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. இந்த் போட்டிக்காக தற்போது முதலே கோபிசந்த் அகாடமி ஆயத்தமாகி வருகிறது. 
 
இதன் ஒரு பகுதியாக வீரர் வீராங்கணைகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும் நல்ல உணவுகளை உட்கொள்ளவும், சிறப்பு உணவு முறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜப்பானில் இருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 
 
ஜப்பான் முட்டைகள் ஏன் என்றால், இந்த முட்டையிடும் கோழிகளுக்கு எந்த ஒரு நோய் எதிர்ப்பு ஊசி போடப்படுவதில்லை, முற்றிலும் இயற்கையாகவும் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

பும்ரா இல்லைன்னா என்ன?... சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து கபில் தேவ் கருத்து!

தோனியின் கண்களைப் பார்த்தால் நடுங்குவோம்.. ஷிகார் தவான் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments