Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் நடக்குமா? நடக்காதா? – நாளை மறுநாள் ஆலோசனை

Webdunia
ஞாயிறு, 22 மார்ச் 2020 (10:54 IST)
கொரோனா வைரஸால் நாடு முடங்கி கிடக்கும் சூழலில் ஐபிஎல் போட்டிகள் நடத்தலாமா என்பது குறித்து நாளை மறுநாள் ஐபிஎல் கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் கூடும் இடங்களான தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. உலகளாவிய போட்டிகள் பலவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஒலிம்பிக் போட்டிகள் மட்டும் நடத்துவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளையும் நடத்தலாமா என்பது குறித்து ஐபிஎல் அணி உரிமையாளர்கள் மற்றும் கவுன்சில் ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. கொரோனா பாதிப்புகளால் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் உலகளாவிய கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருப்பதால், அந்த சமயத்தில் ஐபிஎல் நடத்துவது மற்ற நாட்டு வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

போட்டிகளை ரத்து செய்வதால் பெரும் பணம் விரயமாகும் என்பதால் எந்த தேதியில் நடத்துவது என தீர்மானிப்பதற்காக இந்த கூட்டம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments