Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரொனால்டோவை கருவிலேயே அழிக்க நினைத்தேன் - தாயார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Webdunia
சனி, 19 ஜூலை 2014 (17:10 IST)
கால்பந்து உலகில் பிரபலமான வீரர்களின் பட்டியலில் போர்ச்சுகல் கேப்டனும், ரியல் மாட்ரிட் கிளப் வீரருமான 29 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு தனி இடம் உண்டு.
ஆனால் அவரை கருவில் சுமந்த போதே அழித்து விட வேண்டும் என்று முயற்சித்தாராம் அவரது தாயார் டோலோரஸ் அவிரோ.
 
இந்த அதிர்ச்சிகரமான தகவலை அவரே வெளியிட்டுள்ளார். ‘துணிச்சலான தாய்’ என்ற பெயரில் டோலோரஸ் சுயசரிதை புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் ‘ரொனால்டோவை கருவில் இருக்கும் போதே அழிக்க நினைத்தேன். கருவை கலைப்பதற்கு டாக்டரை அணுகினேன். ஆனால் அவர் முடியாது என்று மறுத்து விட்டார்.
 
இதனால் வேறுவழியிலாவது கலைத்து விடலாம் என்று நினைத்து, பீர் குடித்து விட்டு, நீண்ட தூரம் ஓடினேன். ஆனாலும் எனது எண்ணம் ஈடேறவில்லை. பின்னாலில் இந்த ரகசியத்தை தெரிந்து கொண்ட ரொனால்டோ அவ்வப்போது ‘ஜோக்’ செய்வார். ‘அம்மா என்னை பாருங்கள்.. நீங்கள் கருவிலேயே அழிக்க நினைத்தீர்கள்.
 
ஆனால் நான் தான் இப்போது சம்பாதித்து உங்களையும், வீட்டையும் காப்பாற்றுகிறேன் என அடிக்கடி சொல்வார்’ என்று அந்த புத்தகத்தில் டோலோரஸ் குறிப்பிட்டுள்ளார்.

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

Show comments