Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால்பந்து மன்னன் மெஸ்சியின் சகோதரர் மீது ரசிகர்கள் திடீர் தாக்குதல்

Webdunia
திங்கள், 6 ஜூலை 2015 (12:07 IST)
கோபா அமெரிக்க கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் மெஸ்சியின் சகோதர் ரோட்ரிகோவை ஒரு ரசிகர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு ஆண்டின் கோபா அமெரிக்க கால்பந்து ஆட்டத்தின் இறுதி போட்டியில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணியை வென்று சிலி அணி கோப்பையை வென்று அசத்தியுள்ளது. இந்த பரபரப்பான பைனலை நேரில் கண்டு ரசிக்க கால்பந்து மன்னனான மெஸ்சியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கால்பந்து மைதானத்திற்கு வருகை தந்தனர்.
 
இந்நிலையில் ஆட்டம் நடந்து கொண்டிருந்த போது திடீரென சிலி நாட்டு ரசிகர்கள் அர்ஜெடினா வீரர் மெஸ்சி அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ரசிகர் ஒருவர் ஒரு படி மேல் சென்று மெஸ்சியின் சகோதரரை அடித்துள்ளார். மிகவும் பரபரப்பான இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் மெஸ்சியின் குடும்பத்தினரை பாதுகாப்பான இடத்தில் மாற்று இடம் ஏற்படுத்தி தந்தனர்.

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

Show comments