செஸ் ஒலிம்பியாட்டில் குரங்கம்மை சோதனை! – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Webdunia
சனி, 16 ஜூலை 2022 (12:32 IST)
மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு குரங்கம்மை சோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்விற்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொள்ள வரும் பல நாட்டு வீரர்கள், வீராங்கனைளுக்கும் உணவு, தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்டவற்றை மேற்கொள்ள தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா மற்றும் குரங்கம்மை தொற்று அதிகரித்து வருகிறது. முன்னதாக சென்னை விமான நிலையம் வரும் செஸ் விளையாட்டு வீரர்கள் கொரோனா பரிசோதனைக்கு பிறகே தங்கும் விடுதிகளுக்கு அனுப்பப்படுவார்கள் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது செஸ் வீரர்களுக்கு குரங்கம்மை பரிசோதனையும் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. குரங்கம்மை பரிசோதனையில் நெகட்டிவ் வரும் வீரர்கள் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்றும், குரங்கம்மை தொற்று வீரர்களுக்கு இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

அடுத்த கட்டுரையில்
Show comments