Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து 2 கோல்கள் போட்ட ரொமெலா: பெல்ஜியம் அணி அபார வெற்றி

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2018 (08:58 IST)
ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர்  போட்டியில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் பெல்ஜியம் அணி பனாமா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது
 
இந்த போட்டியில் பெல்ஜியம், பனாமா என இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக தடுப்பு ஆட்டத்தை கையண்டதால் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இதனால் இடைவேளையின் போது ஆட்டம் 0-0 என்ற நிலையில் இருந்தது.
 
இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் 47-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் டிரைஸ் மெர்டன்ஸ் அபாரமாக ஒரு கோலை அடித்தார். இதனால் பெல்ஜியம் அணி 1-0 என முன்னிலை பெற்றது.
 
ஒரு கோல் போட்ட உற்சாகத்தில் பெல்ஜியம் அணியினர் தங்களது ஆக்ரோஷத்தை அதிகப்படுத்தியதால் அந்த அணியின் முன்னணி வீரர் ரொமெலோ லகாகு 69வது மற்றும் 75-வது நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்ததால் பெல்ஜியம் அணி 3-0 என கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 
 
இந்த கோல்களை சமன்படுத்த பனாமா அணியினர் எவ்வளவு முயன்றும் கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் பெல்ஜியம் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3 புள்ளிகளை தட்டிச் சென்றது. 
 
முன்னதாக நடைபெற்ற இன்னொரு போட்டியில் ஸ்வீடன் அணி, தென்கொரியாவை வீழ்த்தியது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments