Webdunia - Bharat's app for daily news and videos

Install App

350 - 500 சதவீத சம்பள உயர்வு: இந்திய அணி வீரர்கள் குஷி...

Webdunia
வியாழன், 8 மார்ச் 2018 (16:40 IST)
பிசிசிஐ இந்திய அணி வீரர்களின் பட்டியலையும், வீரர்களுக்கான கிரேட் மற்றும் ஊதிய ஒப்பந்தங்கள் குறித்து அறிவித்துள்ளது. மேலும், A+ கிரேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
இதுவரை A, B, C என 3 பிரிவுகள் மட்டுமே இருந்தது, தற்போது A+ கிரேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கிரேடில் ஐந்து வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவன், புவனேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா A+ கிரேட் அந்தஸ்துடன் ரூ.7 கோடி சம்பளம் பெறவுள்ளனர். 
 
A பிரிவில் தோனி, அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, முரளி விஜய், புஜாரா, அஜிங்க்ய ரஹானே, விருதிமான் சாஹா ஆகிய ஏழு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ரூ.5 கோடி சம்பளம் அளிக்கப்படும். 
 
B பிரிவில் கே.எல்.ராகுல், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், சாஹல், ஹர்திக் பாண்டியா, இசாந்த் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ரூ.3 கோடி அளிக்கப்படும். 
 
C பிரிவில் கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டே, அக்சர்படேல், கருண் நாயர், சுரேஷ் ரெய்னா, பார்தீவ் படேல், ஜெயந்த் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஒரு கோடி வழங்கப்படும். 
 
கணக்கு படி  A+ கிரேட் வீரர்களுக்கு 350% அதிக சம்பளமும், A கிரேட் வீரர்களுக்கு 500% அதிக சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற லக்னோ.. போராடி தோற்ற மும்பை இந்தியன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments