Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 ஒவருக்கு 29 ரன்கள், 3 விக்கெட் – தடுமாறும் ஆஸ்திரேலியா, அனல் பறக்கும் இங்கிலாந்து பவுலிங் !

Webdunia
வியாழன், 11 ஜூலை 2019 (16:03 IST)
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி நடந்து வருகிறது.

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. அதையடுத்து இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. முதலில் களமிறங்கிய பிஞ்ச் டக் அவுட்டாகி வெளியேற, வார்னர் 9 ரன்களிலும் ஹாண்ட்ஸ்கோம்ப் 4 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். அதையடுத்துக் களத்துக்கு வந்த ஸ்மித்தும் அலெக்ஸ் கேரியும் நிதானமாக விளையாடி வருகின்றனர்.

தற்போது வரை ஆஸி 12 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 29 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

தொட்டதெல்லாம் தங்கமாக மாறும் மிடாஸ் மன்னனா பேட் கம்மின்ஸ்?.. அடுத்தடுத்து வென்ற கோப்பைகள்!

இப்போது கொண்டாட்டங்களுக்கு இடமில்லை…. ஆட்டநாயகன் விருது பெற்ற ஷபாஸ் அகமது!

உலகக் கோப்பையில் இந்திய அணியில் யாரை எடுக்கலாம்?... ப்ளேயிங் லெவன் அணியை அறிவித்த யுவ்ராஜ்!

“உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு நல்ல வாய்ப்புள்ளது”- ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

நான் தடுமாறிய போது எனக்கு உதவியவர் தினேஷ் கார்த்திக் – கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments