Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வீராங்கணை உலக சாதனை; துப்பாக்கி சுடுதலில் அசத்தல்

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2016 (16:32 IST)
சுவீடனில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா தங்கம் வென்றதுடன் புதிய உலக சாதனையும் படைத்துள்ளார்.
 

 
சுவீடன் கோப்பை கிராண்ட் பிரிக்ஸ் துப்பாக்கி சுடுதல் போட்டி அந்நாட்டின் சாவ்ஸ்ஜோ நகரில் நடந்தது. இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தில் 23 வயதாகும் ஜெய்ப்பூரை சேர்ந்த இந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா அபாரமாக செயல்பட்டு 211.2 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றதுடன், புதிய உலக சாதனையும் படைத்தார்.
 
இதற்கு முன்பு ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சீன வீராங்கனை யி சிலிங் 211 புள்ளிகள் சேர்த்ததே, இந்த பிரிவில் உலக சாதனையாக இருந்து வந்தது. இந்த சாதனையை அபூர்வி சண்டிலா தகர்த்து புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
 
இந்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு ஏற்கனவே தகுதி பெற்று விட்ட சண்டிலா, இந்த உலக சாதனையின் மூலம் தனது ஒலிம்பிக் பதக்க நம்பிக்கையை அதிகரித்துள்ளார்.

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

Show comments