Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பந்துவீச்சில் சந்தேகம் – அம்பாத்தி ராயுடுவுக்கு சோதனை !

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2019 (08:37 IST)
சர்ச்சைக்குரிய விதத்தில் பந்து வீசிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அம்பாத்தி ராயுடுவை சோதனைக்கு உட்படுத்தக் கூறியுள்ளது ஐசிசி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது இந்தியாவின் பகுதி நேரப் பந்து வீச்சாளரான அம்பாத்தி ராயுடு இரண்டு ஓவர்கள் வீசினார். அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் மணிக்கட்டை சுழற்றுதல் மற்றும் பந்தை எறிதல் ஆகிய ஆகிய விதிமுறைகளை மீறியதாகக் கூறி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டினால் அவர் தன்னை 14 நாட்களுக்குள் தன்னை சோதனைக்குட்படுத்தி தனது பந்துவீசும் முறையில் எந்த விதிமீறலும் இல்லை என நிரூபிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

ஆனால் அதுவரையில் போட்டிகளில் விளையாடவும் ஒஅந்து வீசவும் தடையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை அவரது  பந்துவீச்சில் வீதிமீறல் இருப்பின் அவருக்கு பந்துவீசத் தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்காப்படுகிறது.

ஏற்கனவே இலங்கையின் முத்தையா முரளிதரன், பாகிஸ்தானின் சயித் அஜ்மல் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் சுனில் நரேன் ஆகியோர் மீதும் இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments