Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி: நாளை தொடக்கம்!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (06:38 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. ஏற்கனவே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது 
 
இதனையடுத்து தற்போது இந்தியா 1-0 என்ற புள்ளி கணக்கில் முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக ஒரு சில வீரர்கள் ஏற்கனவே அணியில் இருந்து விலகியுள்ள நிலையில் தற்போது மார்க்வுட் அடைந்து உள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது 
 
5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இங்கிலாந்தில் கோலியின் சராசரி இவ்வளவுதான்… கிண்டல் செய்த முன்னாள் கேப்டன்!

ஓட விருப்பம் இல்லன்னா சத்தமா ‘no’ சொல்லு… கில்லிடம் கடிந்து கொண்ட ஜெய்ஸ்வால்.!

இளம் கன்று பயமறியாது… இங்கிலாந்து பவுலர்களுக்கு பேட் மூலம் பதில் சொன்ன ஜெய்ஸ்வால் & கில்!

டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் தமிழக வீரர்.. ஆடும் லெவனில் யார் யார்?

ரோஹித், கோலி இல்லாவிட்டாலும் வெற்றி எளிதாக இருக்காது… பென் ஸ்டோக்ஸ் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments