தென் ஆப்பிரிக்காவில் தோல்வி... சில சந்தேகங்கள்!
, வியாழன், 2 ஜனவரி 2014 (17:11 IST)
தென் ஆப்பிரிக்க தொடருக்கு முந்தைய ஏகப்பட்ட சர்ச்சைகள், மூடுமந்திரங்களுக்குப் பிறகு இந்தியாவின் 'அதிமுக்கியமான' தென் ஆப்பிரிக்கா தொடர் ஓரளவுக்கு சேதமில்லாமலே முடிந்தது. ஆனால் சேதம் இல்லாவிட்டாலும் இந்திய தோல்வியில்தான் அது முடிந்துள்ளது என்பது சில சந்தேகங்களை எழுப்புகிறது.
இந்தியா விளையாடிய விதம் பற்றி ரெக்கார்ட் புக்ஸில் இருக்காது. ஒருநாள் தொடரை 2- 0 என்றும் டெஸ்ட் தொடரை 1- 0என்றும் முழுதும் இழந்துவிட்டு தோல்வியுடனேயே இந்திய அணி திரும்பியுள்ளது என்பதை நாம் மறக்கலாகாது.முதல் டெஸ்ட் போட்டியில் கடைசி 3 ஓவர்களில் 16 ரன்களை அடிக்க முடியாமல் (?) 2 ஓவர்களை பந்துகளை வெறுமனே வேடிக்கை பார்த்ததில் ஒருவர் ஸ்டெய்ன் இவர் 2வது டெஸ்டில் 46 ரன்கள் அடிக்கிறார் அதுவும் மேலேறி வந்து ஷாட்களை ஆடுகிறார்!! முதல் இன்னிங்ஸில் நல்ல இந்திய பந்து வீச்சிற்கு எதிராக அபாரமாக ஆடிய பிலாண்டர் 2வது இன்னிங்சில் வெற்றிக்கு ஆடாதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.
கேப்டன் ஸ்மித்திடமிருந்தோ, பயிற்சியாளரிடமிருந்தோ களத்தில் நிற்கும் ஸ்டெய்ன் மற்றும் பிலாண்டருக்கு எந்த வித அறிவுரையும் வரவில்லை. இவையெல்லாம் ஏதோ நடந்திருக்கிறது என்ற சந்தேகத்தை கடுமையாகக் கிளப்புகிறது.