42. குரு படத்தில் வசனம் எழுதியவர்கள் ஹாஸன் பிரதர்ஸ். ஹாஸன் பிரதர்ஸில் கமல் உள்பட பலரும் உண்டு. இது அப்போது சிறிய சர்ச்சையையும் உருவாக்கியது.
43. கமலுக்கு மேக்கப் மீது தணியாத ஆர்வம். இதற்காகவே ஹாலிவுட் சென்று பிரபல மேக்கப்மேன் மைக்கேல் வெஸ்ட்மோரிடம் உதவியாளராக இருந்து மேக்கப் கலையை பயின்றார். அவர் பணியாற்றிய சில்வர்ஸ்டார் ஸ்டாலோனின் படத்தில் கமலும் சில தினங்கள் பணியாற்றியிருக்கிறார்.
44. கமல் சார்லி சாப்ளினின் தீவிர ரசிகர். அவரின் பாதிப்புகளை கமல் படத்தில் காணலாம். என்னுடைய அலுவலக அறையில் இருக்கும் ஒரே புகைப்படம் சாப்ளினுடையது என்று பல வருடங்களுக்கு முன்பு கமல் கூறியிருக்கிறார்.
45. கமல் ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் நடுவில் ஓய்வு எடுப்பது கிடையாது. ஓய்வு எடுக்கிறேன் என்று வெளிநாடு சென்றால் அங்கும் சினிமா குறித்த ு, தொழில்நுட்பம் குறித்து படித்துக் கொண்டிருப்பார். கமலைப் பொறுத்தவரை ஓய்வு என்பதே சினிமாவைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வதுதான். இதனைச் சொன்னவர் கமலின் மூத்த சகோதரர் சந்திரஹாசன்.
46. நடிகர் ராஜேஷும் கமலும் நண்பர்கள். ஒருமுறை படம் இயக்கயிருப்பதாக ராஜேஷ் சொல்ல உடனே இருக்கையிலிருந்து எழுந்த கமல் அவரை வரவேற்கும் விதமாக சொன்ன வாசகம் புகழ் பெற்றது. இது கடல ், இங்கு எத்தனை திமிங்கலங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம்.
47. தொ.பரமசிவத்தின் நாட்டாற்றியல் ஆய்வுகள ், புத்தகங்கள் மீது கமலுக்கு மதிப்பும், ஈடுபாடும் உண்டு. தொ.ப. வின் புத்தகம் ஒன்றிலிருந்து அவர் எடுத்துக் கொண்ட பெயர்தான ், விருமாண்டி.
48. கமலின் இலக்கிய ஈடுபாடு அனைவரும் அறிந்தது. தனது ரசிகர்மன்ற பத்திரிகையான மய்யத்தை இலக்கிய பத்திரிகைப் போலவே நடித்தினார். இப்போது இது இணையத்திலும் வெளிவர உள்ளது.
49. மறுநாள் எடுக்க வேண்டிய காட்சிகள ், அதற்குத் தேவையான பொருட்கள ், கருவிகள், எப்படி படமாக்கப்பட வேண்டும் என்பதை முதல்நாளே தெளிவாக கூறிவிடுவது கமலின் பழக்கம். அடுத்த நாள் அவர் சொன்னதில் ஏதேனும் தவறு நடந்தால் கடுங்கோபம் வரும்.
50. நாகேஷ் கமலுக்குப் பிடித்தமான நடிகர். பாலசந்தர் இயக்கத்தில் நடிக்கையில ், நாகேஷ்னா இதை இன்னும் சிறப்பா பண்ணியிருப்பார் என்று பாலசந்தர் அடிக்கடி சொல்வதால் ஏற்பட்ட வியப்பு கடைசிவரை கமலிடம் இருந்தது. நாகேஷை தொடர்ச்சியாக கமல் பயன்படுத்திக் கொண்டதும் இதனால்தான்.
51. இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர் அறிமுகமானது கமல் படத்தில் என்பது பலருக்கு தெரியாது. மலையாளத்தில் கமல் நடித்த சாணக்யன் படத்தில் ஊர்மிளா அறிமுகமானார்.
52. ஆளவந்தான் படத்தில் வன்முறை காட்சிகளை அனிமேஷனில் காட்டியிருப்பார் கமல்ஹாசன். இந்தப் படம்தான் ஹாலிவுட் இயக்குனர் குவெண்டின் டொரண்டினோ தனது கில் பில் படத்தில் வன்முறை காட்சிகளை அனிமேஷனில் வைக்க காரணம். இதனை அவரே தெரிவித்திருக்கிறார்.
53. கமலுக்குப் பிடித்த எழுத்தாளர்களில் முக்கியமானவர் ஜெயகாந்தன். தனது முக்கியமான படங்களை திரைக்கு வருவதற்கு முன்பு ஜெயகாந்தனுக்கு திரையிட்டு காண்பிப்பது கமலின் வழக்கம்.
54. மலையாள இயக்குனர்கள் சிபி மலையில ், பரதன் போன்றோரை தமிழுக்கு அழைத்துவர வேண்டும் என்ற ஆசை கமலுக்கு இருந்தது. அதன் வெளிப்பாடுதான் தேவர் மகனை பரதன் இயக்கியது. சிபி மலையில் இயக்கத்தில் தமிழ்ப் படம் நடிக்க வேண்டும் என்ற கமலின் ஆசை இதுவரை கைகூடவில்லை.
55. பாடல்கள் இல்லாத கமல் படங்கள் இரண்டு. பேசும் படம ், குருதிப்புனல். கமல் தயாரிப்பில் சத்யராஜ் நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்திலும் பாடல்கள் கிடையாது.
56. பாலசந்தர் கமலைப் பாராட்ட ி, மை டியர் ராஸ்கல் என்று தொடங்கி எழுதிய நீண்ட கடிதத்தை பெரிய பாராட்டாக இன்றும் கமல் கருதுகிறார். பிரேமிடப்பட்ட அந்தக் கடிதத்தை இப்போதும் அவரது வீட்டில் காணலாம்.
57. கமல் இதுவரை தமிழ ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, வங்காளம் என்று ஆறு மொழிகளில் நடித்திருக்கிறார். விரைவில் ஆங்கிலமும் இதில் சேர இருக்கிறது.
58. நான் சிறுவனாக அறிமுகமானேன ். வில்லன் வேஷத்தில் பிரபலமானேன், நல்ல ஹீரோ என்று பெயர் எடுக்க வேண்டும் என்பதே என் ஆசை. அதற்கு காலமும் கலையுலகமும் கை கொடுக்க வேண்டும். - 1974 ல் கன்னியாகுமரி படத்தில் ஹீரோவாக அறிமுகமான போது கமல் சொன்னது.