Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருங்காலி மாலை அணிவதால் செல்வம் பெருகுமா?

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (13:40 IST)
ருத்ராட்ச மாலை, துளசி மாலை வரிசையில் மிகவும் நன்மையும், பூரண அருளும் நிறைந்த மாலைகளில் ஒன்று கருங்காலி மாலை.



நன்றாக வைரம் பாய்ந்த கருங்காலி மரத்தை வெட்டி அந்த துண்டுகளை சிறிய உருண்டைகளாக உருட்டி கருங்காலி மாலைகள் செய்யப்படுகின்றன. ஜாதக சாஸ்திரப்படி செவ்வாய் கிரகத்தின் நன்மையை நீக்கமற பெற கருங்காலி மாலைகளை அணியலாம்.

கருங்காலி மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்:

மேஷம், விருச்சிகம் மற்றும் மிதுன ராசிக்காரர்கள் கருங்காலி மாலை அணிவது இஷ்ட தெய்வங்களின் பூரண அருளை தருகிறது.

அனைத்து தெய்வங்களும் குடியிருக்கும் மாலை கருங்காலி மாலை. கருங்காலி மாலையை அணிந்தாலோ, வீட்டில் வைத்திருந்தாலோ குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.

கருங்காலி மாலைகள் அணிவதால் நவகிரக தோஷங்களிலிருந்து விடுபடலாம்.

கருங்காலி மாலையில் உள்ள மருத்துவ குணங்கள் காரணமாக இதை அணிவதால் நோய்கள் எளிதில் அண்டாது என்றும் கூறப்படுகிறது. கருங்காலி மாலை அணிவதால் செல்வம் பெருகும் என பலரும் நம்புகிறார்கள். ஆனால் அப்படி கிடையாது. கருங்காலி மாலை அணிவதால் ஏற்படும் நேர்மறை எண்ணங்கள் நமக்கு நன்மை பயக்க கூடியவை.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து திருப்திகரமாக இருக்கும்! இன்றைய ராசி பலன்கள் (18.06.2025)!

இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்! இன்றைய ராசி பலன்கள் (17.06.2025)!

வறண்ட உலகிற்கு உயிர் கொடுத்த விநாயகர்: சிருங்கேரி கமண்டல கணபதி திருக்கோவில் சிறப்பு!

இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி பெற கூடுதல் உழைப்பு தேவை! இன்றைய ராசி பலன்கள் (16.06.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments