இந்த வாரப் புனிதப் பயணத்தில் நாங்கள் உங்களை மராட்டிய மாநிலத்தில் உள்ள திரிவிக்ரம் கோயிலிற்கு அழைத்துச் செல்கிறோம். கந்தேஷ் பகுதியில் செந்தூர்ணி என்ற கிராமத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில் 1744இல் புகழ்பெற்ற துறவி ஸ்ரீ கடோகி மஹாராஜ் என்பவரால் நிறுவப்பட்டதாகும்.திரிவிக்ரம் கோயிலின் சிறப்புகளைப்பற்றி அதன் தலைமைக் குரு சாந்தாராம் மஹாராஜ் பகத் பரவசத்துடன் விளக்கினார்.ஸ்ரீ கடோகி மஹாராஜ் ஒவ்வொரு ஆண்டும் பந்தர்பூர் என்ற ஊருக்கு நடந்து சென்று கடவுள் வித்தல்-ஐ...