webdunia photoWD சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்று திரியாம்பகேஸ்வரர் ஜோதிர் லிங்கமாகும். மகாராஷ்ட்ர மாநில நாசிக்கில் இருந்து 35 கி.மீ. தூரத்தில் திரியாம்பக் என்ற இடத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கிராமத்தை நெருங்கும் போதே உங்களுள் ஆன்மீக உணர்வு பெருகுவதைக் காணலாம். மகா மிருத்யுஞ்சை மந்திரம் ஓதப்படுவதால் அச்சூழல் தூய்மையானதாகவும், பக்தி நிறைந்ததாகவும் இருப்பதைக் காணலாம். கிராமத்திற்குள் நுழைந்து சற்று தூரம் நடந்ததும் கோயிலின் பெரும் வாயில் நம்மை வரவேற்கிறது....