Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

த‌மி‌ழ்‌ப் பு‌த்தா‌ண்டு ரா‌சி பல‌ன் : தனுசு

த‌மி‌ழ்‌ப் பு‌த்தா‌ண்டு ரா‌சி பல‌ன் : தனுசு
, சனி, 21 ஏப்ரல் 2012 (20:01 IST)
FILE
மந்திரியே எதிர்த்தாலும் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். கலா ரசனை அதிகமுள்ள நீங்கள், சுற்றுப் புறத்தை சுத்தமாக வைத்திருப்பீர்கள். காசுபணம் தான் குறிக்கோள் என்றில்லாமல் வாழ்க்கையை காதலிப்பீர்கள். எல்லா சம்பவங்களுக்கும் ஒரு காரண, காரியம் இருக்கும் என்பதை உணரும் நீங்கள், யாரிடமும் உதவி கேட்க தயங்குவீர்கள். அனைத்து துறைகளிலும் ஆழ்ந்த அறிவு கொண்ட நீங்கள், அதை அடுத்தவர்களுக்காக மட்டும் பயன்படுத்துவீர்கள். அதிகம் ஆசைபடாமல் அடுத்தவர் சொத்து மீதும் கண் வைக்காமல், உதிக்கும் போது விதிக்கப்பட்டதை உணர்ந்து வாழ்பவர்களே!

உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் குரு அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த நந்தன வருடம் பிறப்பதால் பிரபலமாவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளை பாக்யம் கிடைக்கும். சமூகத்தில் பிள்ளைகளால் அந்தஸ்து ஒருபடி உயரும். பணவரவு அதிகரிக்கும். ஆனால் உங்கள் ராசியிலேயே இந்த ஆண்டு பிறப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். அடிக்கடி கோபப்படுவீர்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

சித்திரை, வைகாசி மாதங்களில் எதிர்பார்த்த பணம் வரும். தடைபட்ட காரியங்களை முடிப்பீர்கள். கல்யாணம், கிரகபிரவேசம், சீமந்தம் என வீடு களை கட்டும். குடும்பத்தில் எப்போது சலசலப்புதான். மனைவி தன் சொந்தம் பந்தங்களை பெருமையாகப் பேசி உங்களிடம் சண்டையிட்டாரே! இனி குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கணவன்-மனைவிக்குள் எலியும், பூனையுமாக இருந்த நிலை மாறி நகமும் சதையுமாக இணைவீர்கள். நெடுநாட்களாக வட்டி மட்டுமே கட்டிக் கொண்டிருந்தீர்களே! இனி அசலையும் கட்டி முடிக்கும் அளவிற்கு வருமானம் உயரும். பேச்சில் முதிர்ச்சி தெரியும்.

பூர்வீகச் சொத்தை விற்று புது சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் இருந்து வந்த கோபதாபங்கள் நீங்கும். அவர்களை கலை, மற்றும் விளையாட்டுத் துறையில் ஈடுபடுத்துவீர்கள். சகோதரியின் திருமணம் தள்ளிதள்ளிப் போனதே! இனி நல்ல வரன் அமையும். அம்மாவுக்கு இருந்து வந்த மூட்டுவலி, முழங்கால் வலியெல்லாம் பறந்தோடும். 13.4.2012 முதல் 22.6.2012 வரை செவ்வாய் 9-ம் வீட்டில் நிற்பதால் தந்தையாருடன் கருத்துமோதல்கள் வந்து போகும். தந்தை வழி சொத்துக்கள், சொந்தங்களால் அவ்வப்போது பிரச்சனைகள் வந்துப்போகும். திடீர் பயணங்களால் கையிருப்பு கரையும்.

17.5.2012 முதல் உங்கள் ராசிநாதனான குருபகவான் 6-ம் வீட்டில் நுழைவதால் செலவுகள் துரத்தும். குடும்பத்தில் எதை பேசினாலும் சண்டையில் போய் முடியும். பணக் கையிருப்புகள் கரையும். அக்கம் பக்கத்தில் கடன் வாங்க வேண்டியது வரும். சொத்துப் பிரச்சனைக்காக நீதிமன்றம் செல்ல வேண்டியது வரும். எதிலும் அகல கால் வைக்க வேண்டாம். விரலுக்கேற்ற வீக்கம் இருந்தால் போதும். அரசு விவகாரங்களில் கவனம் தேவை. யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விமர்சித்துப் பேச வேண்டாம்.

ஆனி, ஆடி மாதங்களில் சிறுசிறு விபத்துகள் வந்துநீங்கும். மன உளைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். வழக்குகளில் இழுபறி நிலை உருவாகும். யாரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அவ்வப்போது வரும் முன்கோபத்தை குறைக்கப்பாருங்கள். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் பரபரப்புடன் காணப்படுவீர்கள். வருங்கால நலனை கருத்தில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கோவில் கோவிலாக அலைந்தும் நமக்கு ஒரு வாரிசு கூட இல்லையே என வருந்திய தம்பதியர்களுக்கு குழந்தபாக்‌கியம் உண்டாகும்.

புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். திருமணம் கூடி வரும். மார்கழி மாதத்தில் காய்ச்சல், சளித் தொந்தரவு வந்து போகும். வீண் விவாதங்களும், அலைச்சலும் வரக்கூடும். உறவினர்கள் உங்கள் நிலையறியாது பணம் கேட்டு நச்சரிப்பார்கள். கொஞ்சம் நிதானமாக அவர்களிடம் உங்களின் நிலைமையை எடுத்துச் சொல்லுங்கள். வெகுநாட்களாக போகாமல் இருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசியவாதிகளின் எண்ணங்கள் ஈடேறும்.

13.4.2012 முதல் 11.9.2012 வரை சனி பத்தாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் கௌரவப் பதவிகள் தேடி வரும். வேற்று மதத்தினர் மற்றும் வெளிநாட்டினரால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். பாதியிலேயே நின்று போன பல வேலைகள் இனி முழு முழு மூச்சுடன் முடிப்பீர்கள். வேற்று மதத்தினர், மொழியினரால் ஆதாயம் உண்டு. வழக்குகள் சாதகமாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். 12.9.2012 முதல் 11-ம் வீட்டிற்கு சனி நுழைவதால் உத்யோகத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வேலை சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். பெற்றோருடன், உடன் பிறந்தவர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள், மனக் கசப்புகள் நீங்கும். நண்பர்கள், உறவினர்களில் சிலர் எதிரியாக மாறி, ஏகப்பட்ட தொல்லைகள் தந்தார்களே! அவர்களெல்லாம் இனி பணிந்து வருவார்கள். வெளி வட்டாரத்தில் உங்களை போக விட்டு புறம் பேசியவர்களெல்லாம் இனி புகழ்ந்து பேசுவார்கள்.

2.12.2012 முதல் ராகு லாப வீட்டில் நுழைவதால் எதிலும் வெற்றியே கிட்டும். வேற்று மதத்தினர்களின் உதவி கிடைக்கும். ரியல் எஸ்டேட் மூலம் பணம் வரும். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் வியக்கும்படி உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். ஆடை ஆபரணங்கள் சேரும். எந்த ஒரு விஷயத்திலும் தெள்ளத்தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் ஒருவித தயக்கத்துடன் இருந்தீர்களே! இனி அந்த அவலநிலை மாறும். மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குமளவிற்கு அனுபவ அறிவு கிடைக்கும்.

பழைய கடனில் ஒருபகுதியை அடைக்கும் அளவிற்கு பணவரவு உண்டு. கேது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டிற்கு வருவதால் பிள்ளைகள் பிடிவாதமாக நடந்து கொள்வார்கள். கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருப்பது நல்லது. யாரையும் விமர்சித்துப் பேசவேண்டாம். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் கூடுதலாகும். தேனொழுக பேசுகிறார்கள் என்று யாரையும் நம்பி விட வேண்டாம். குடும்பத்தில் சுபச் செலவுகள் இருந்துக் கொண்டேயிருக்கும். விருந்தினர், உறவினர் வருகை அதிகரிக்கும். செரிமானக் கோளாறு, தலைச் சுற்றல் வரக்கூடும்.

கன்னிப்பெண்களே! கண்ணுக்கழகான கணவர் அமைவார். வயிற்றுவலி, தலைச்சுற்றல், தோலில் நமைச்சல் விலகும். பெற்றோர் உங்களை புரிந்து கொள்வார்கள். பாதியிலேயே விட்ட படிப்பைத் தொடருவீர்கள்.

மாணவ-மாணவியர்களே! அரட்டைப் பேச்சை தவிருங்கள். சந்தேகங்களை கேட்பதில் தயக்கம் வேண்டாம். கணக்கு கொஞ்சம் கசக்கும். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பரிசு, பாராட்டு பெறுவீர்கள். ஆசிரியரின் ஆதரவு உண்டு.

வியாபாரிகளே! தாராளமாக முதலீடு செய்து, விசாலமாக கடையை விரிவுபடுத்தி நட்டப்பட்டது தான் மிச்சம். இனி ஆழம் தெரிந்து கால் வைப்பீர்கள். மற்றவர்களின் ஆலோசனையை ஏற்காமல் சொந்தமாக சிந்திப்பீர்கள். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. அனுபவமிகுந்த வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். சின்ன இடத்தில் அவஸ்தைப் பட்டீர்களே! பெரிய இடமாகவும் மக்கள் கூடும் முக்கிய இடமாகவும் புது கடை அமையும். உணவு, ஏற்றுமதி, இறக்குமதி, பெட்ரோ கெமிக்கல் வகைகளால் பெரும் பணம் சம்பாதிப்பீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். மாசி, பங்குனி மாதங்களில் பிரச்சனை தந்தவரை நீக்கிவிட்டு புதிய பங்குதாரர்களை சேர்ப்பீர்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையே செலுத்துவீர்கள்.

உத்யோகஸ்தர்களே! சம்பள பாக்கி கைக்கு வரும். வைகாசி மாதத்தில் புது வேலை அமையும். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களிலும் சாதகமான சாதகமான சூழ்நிலை உருவாகும். மூத்த அதிகாரி உதவுவார். உங்களின் நெடுநாள் கனவாக இருந்த பதவியுயர்வும், சம்பள உயர்வும் நிறைவேறும். இருந்தாலும் உங்கள் வளர்சியை விரும்பாத சிலர் குறை கூறிக்கொண்டிப்பார்கள். சக ஊழியர்களின் ஆதரவு சுமராகத்தானிருக்கும். வேலையை தேக்கி வைக்காமல் அவ்வப்போது முடிக்கப் பாருங்கள். மாசி, பங்குனி மாதங்களில் வேறு சில வாய்ப்புகளும் தேடி வரும். கணினி துறையினர்களே! மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடுவதால் வேலைசுமை அதிகரிக்கத்தான் செய்யும்.

அரசியல்வாதிகளே! மேலிடத்தைப் பற்றி சகாக்களிடம் குறை கூறிக் கொண்டிருக்காதீர்கள். சிலர் உங்களைப் பற்றி வீண் வதந்திகளை பரப்பிவிடக்கூடும். கட்சிக் கூட்டங்களுக்கு தவறாமல் கலந்து கொள்ளப்பாருங்கள்.

கலைத்துறையினர்களே! வீண் வதந்திகள் விலகும். கனவுகள் நனவாகும். உங்களின் படைப்புகள் பாராட்டப்படும். அரசு கவுரவிக்கும். மூத்த கலைஞர்களை விமர்சனம் செய்ய வேண்டாம்.

விவசாயிகளே! பயிர்களை நவீனரக உரமிட்டு பாதுகாப்பீர்கள். எண்ணெய் வித்துகள், துவரை, உளுந்து பயறு வகைகளால் ஆதாயமடைவீர்கள். நிலத்தகராறுப் பிரச்சனைகள் வரும்.

ஆகமொத்தம் இந்த புத்தாண்டு கட்டுக்கடங்காத செலவுகளையும், கடினமாக உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளினாலும், மற்றொரு பக்கம் மகிழச்சியையும், வெற்றியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:
ஸ்ரீரடி சத்ய சாய்பாபா. செங்கல் சூளை அல்லது கல்குவாரியில் வேலை செய்யும் கூலித்தொழிலாளிக்கு உதவுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil