Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

த‌மி‌ழ்‌ப் பு‌த்தா‌ண்டு ரா‌சி பல‌ன் : துலாம்

த‌மி‌ழ்‌ப் பு‌த்தா‌ண்டு ரா‌சி பல‌ன் : துலாம்
, சனி, 21 ஏப்ரல் 2012 (19:47 IST)
FILE
ஈரப் பார்வையால் அனைவரையும் தன் வசம் ஈர்க்கும் ஆற்றல் கொண்ட நீங்கள், எல்லோரின் இயக்கங்களையும் அசைப்போட்டு எடைபோடுவதில் வல்லவர்கள். சுற்றியிருப்பவர்களை சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் வைக்கும் நீங்கள், அவ்வப்போது தத்துவமாகவும் பேசுவீர்கள். மனதிற்குப்பிடித்தவர்களுக்கு வாரி வழங்குவீர்கள். தலைமைப் பண்பு அதிகமுள்ள நீங்கள், மற்றவர்களை வழி நடத்திச் செல்வதில் வல்லவர்கள். போராட்டங்களை சளைக்காமல் எதிர்கொள்பவர்களும் நீங்கள்தான். சகிப்புத் தன்மை கொண்ட நீங்கள் சளைக்காமல் உழைப்பவர்கள்.

உங்கள் ராசிக்கு மூன்றாவது ராசியில் இந்த நந்தன ஆண்டு பிறப்பதால் முடியாததை முடித்துக் காட்டுவீர்கள். பாதியிலேயநின்றுபோன காரியங்கள் உடனே நிறைவேறும். தைரியம் பிறக்கும். குரு உங்கள் ராசியை பார்ப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. சாதாரண நிலையிலிருந்து சாமான்ய நிலைக்கு முன்னேறுவீர்கள். பேச்சிலிருந்த முணுமுணுப்பு, சலிப்பு நீங்கும். தன்னம்பிக்கையுடன் பேசுவீர்கள். உங்களின் நிர்வாகத்திறமை அதிகரிக்கும். இனி குழம்பாமல் பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைய ஏற்பார்கள். குழந்தை இல்லாத தம்பதியருக்கு வாரிசு உண்டாகும். சித்திரை, வைகாசி மாதங்கள் கொஞ்சம் அலைச்சலை தந்தாலும் வளர்ச்சியையும் தரும்.

மனைவியையும், மனைவி வழி உறவினர்களையும் அனுசரித்துப் போகவேண்டியது வரும். வீடு கட்டுவது, நண்பர்கள், உறவினர்கள் வீட்டு விஷேசங்களை முன்னின்று நடத்துவதாலும் செலவுகள் அதிகரிக்கும். சிறுசிறு விபத்துகள் நிகழ வாய்ப்பிருக்கிறது. மிதமான வேகத்தில் வாகனத்தை இயக்கவும். சகோதரர்களுக்கிடையே சச்சரவுகள் அவ்வப்போது வந்துபோனாலும் பாசம் குறையாது. 13.4.2012 முதல் 22.6.2012 வரை செவ்வாய் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் புது சொத்து வாங்குவீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் மூலம் பணம் வரும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். பழைய பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். வேற்று மதத்தினர், மொழியினரால் ஆதாயமுண்டு.

மகளுக்கு காலாகாலத்தில் கல்யாணத்தை முடித்துவிடவேண்டுமென்று கங்கனம் கட்டிக் கொண்டு அழைந்தீர்கள். ஆனால் படிப்பிருந்தால் அழகில்லை, அழகிருந்தால் அந்தஸ்து இல்லை என்ற நிலை மாறும். நல்ல வரன் அமையும். ஆவணி மாதத்தில் திருமணம் முடியும். அடுத்தடுத்த சுபநிகழ்வுகளால் வீடு களை கட்டும். பொன், பொருள் சேர்க்கையுண்டு. சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். கணவன்-மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். நீண்டகால லட்சியமாக சொந்த வீடு வாங்க வேண்டும் என்றிருந்தீர்கள் அல்லவா, அது இப்பொழுது நிறைவேறும். சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் காய்ச்சல், சளித்தொந்தரவு, தொண்டைப்புகைச்சல் வந்துபோகும். சிலர் உங்கள் வாயை கிளறுவார்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பணம் விஷயத்தில் கொஞ்சம் உஷாராக இருங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். உங்கள் மகளுக்கு எதிர்பார்த்தபடியே நல்ல வரன் அமையும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக்கொண்டிருந்த உங்கள் மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சொத்துப் பிரச்சனைகள் வருட மத்தியப் பகுதியில் தீரும். பிரபலங்களின் நட்பு கிடைப்பதுடன் அவர்களால் சில காரியங்கள் முடியும்.

17.5.2012 முதல் குரு 8-ல் அமர்வதாலஉணர்ச்சி வசப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். அறிவுப் பூர்வமாக முடிவெடுங்கள். அரசு விவகாரங்கள், வழக்குகளில் அலட்சியப் போக்கு கூடாது. வி.ஐ.பிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். சிலரின் சதியால் சொத்தை இழக்க நேரிடும். சந்தோஷமாக ஓர் இடத்திற்குப் போக வேண்டுமென்று திட்டம் போட்டுக் கிளம்பினால் ஏதாவது சங்கடம் எதிர்பாராமல் குறுக்கே வரும். வெளியிடங்களில் யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். ஆவணி மாதத்தில் எதிர்பார்த்த வகைகளில் பணம் வரும். பழைய கடனை கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும்.

வெளிமாநிலத்தவருடன் புதிய தொடர்புகள் கிடைக்கும். பணத்தட்டுப்பாட்டை சமாளிப்பீர்கள். மாசி மாதத்தில் பிள்ளைகளால் அலைச்சலும், அவர்களுடன் கருத்துமோதல்களும் வந்து போகும். பங்குனி மாதத்தில் அரசால் ஆதாயம் உண்டு. அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். ஆனால் உங்கள் ராசிநாதன் சுக்ரன் 6-ல் மறைவதால் வழக்கு சம்பந்தமான விஷயங்களில் பின்னடைவு ஏற்படும். சிறுசிறு விபத்துகளும், மனைவிக்கு உடல்நலம் பாதிக்கும். வருட மையப்பகுதியில் வீடு மாறுவீர்கள். ஆன்மீக வழிபாடுகளில் மனம் லயிக்கும். வீட்டிற்கு அருகிலிருக்கும் கோவிலைப் புதுப்பிப்பீர்கள். பொது விழாக்களிலும் தலைமை தாங்குவீர்கள். பால்ய சினேகிதர்களை பல வருடங்களுக்குப் பிறகு இப்பொழுது சந்தித்து மகிவீர்கள்.

வருட ஆரம்ப முதல் 11.9.2012 வரை விரையச் சனி நடைபெறுவதால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போங்கள். வீண் சந்தேகங்கள், சேமிக்க முடியாதபடி செலவுகள் உண்டாகும். காசோலை தருவதற்கு முன் பணம் இருக்கிறதா? என்று பார்த்து கொள்ளுங்கள். பால்ய நண்பர்களானாலும், பழைய சொந்தங்கள் ஆனாலும் அத்துமீறிப் பழகவோ, குடும்ப ரகசியங்களை சொல்லி ஆறுதல் அடையவோ வேண்டாம். யாருக்கும் விலை உயர்ந்த பொருட்களை, ஆபரணங்களை இரவல் தர வேண்டாம். நீங்களும் இரவல் வாங்க வேண்டாம்.

வழக்குகளில் வழக்கறிஞரை மாற்றவேண்டி வரும். 12.9.2012 முதல் வருடம் முடியும் வரை ஜென்மச்சனி தொடர்வதால் பெரிய நோய்கள் இருப்பதை போல நினைப்பீர்கள். நடைபயிற்சியை மேற்கொள்ளுங்கள். கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. முடிந்தால் கூழ், கஞ்சி போன்ற பாரம்பரிய உணவுகளை உட்கொள்ளுங்கள். என்ன செய்வதென்றே சில நேரங்களில் தடுமாற வேண்டியது வரும். அடிக்கடி வரும் பயணங்களால் வீண் அலைச்சலும், உடல்நலக்குறைவும் வந்துபோகும்.

2.12.2012 முதல் கேது ஏழாம் வீட்டில் அமர்வதால் மனைவிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கும். சிறு சிறு அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டியது வரும். மனைவி வழி உறவினர்களுடன் மனக்கசப்பு வந்து நீங்கும். ராகு உங்கள் ராசிக்குள் நுழைவதால் லேசாக தலைச்சுற்றல், கனவுத்தொல்லை, அவ்வப்போது முன்கோபம் வந்துபோகும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். அண்டை மாநில புண்ணிய‌த் தலங்கள் சென்று வருவீர்கள். வழக்குகளில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சனை தீரும். சளித்தொந்தரவு, காய்ச்சல், அலர்ஜி வந்து நீங்கும்.

கன்னிப்பெண்களே! தோழிகளுக்கெல்லாம் திருமணம் முடிந்து விட்டதே, நமக்கில்லையே என்று கலங்காதீர்கள். தள்ளிப் போய்க் கொண்டிருந்த கல்யாணம் சிறப்பாக முடியும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் சேரும். மாதவிடாய்க்கோளாறு, வயிற்றுவலி நீங்கும். பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள்.

மாணவர்களே! அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். வகுப்பறையில் வீண் அரட்டை வேண்டாம். தேர்வு சமயங்களில் ஆசிரியர்களின் உதவி கிடைக்கும். உங்களின் திறமையை பலரும் பாராட்டுவார்கள்.நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள்.

வியாபாரிகளே! வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். சித்திரை, வைகாசி பெரிய நிறுவனங்களின் தொடர்பு கிடைக்கும். ஆடி, ஆவணி மாதங்களில் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். மாசி, பங்குனி மாதங்களில் கடையை விரிவுபடுத்துவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி, உணவு, கெமிக்கல், பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் பெருகும். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிடுவதை தவிர்க்கப்பாருங்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் அவ்வப்போது புரிந்து கொள்ளாமல் சண்டையிட்டாலும் இறுதியில் உங்கள் வார்த்தைக்கு கட்டுப்படுவார்கள்.

உத்யோகஸ்தர்களே! பெரிய பதவியில் அமர வேண்டிய நீங்கள் சிலரின் மோசடிகளால் நல்ல வாய்ப்புகளை இழந்தீர்களே, இப்போது உயர்பதவி கிட்டும். நெருக்கடிகள் நீங்கும். உங்களைத் தரக்குறைவாக நடத்திய அதிகாரிகளின் மனம் மாறும். சக ஊழியர்களின் சம்பள உயர்விற்காக போராடுவீர்கள். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சிலநேரங்களில் தன்மானத்தை விட்டுக் கொடுக்க வேண்டியது வரும். ஆவணி, மாசி மாதங்களில் வெளிநாட்டுத் தொடர்புடைய சில நிறுவனங்களிருந்து புது வாய்ப்புகள் தேடி வரும்.

அரசியல்வாதிகளே! கட்சிக்குள் இருந்த மௌனப் போராட்டம் ஓயும். சகாக்களுக்கு மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். எதிர்கட்சியினரை தேவையில்லாமல் வசைபாடாதீர்கள்.

கலைஞர்களே! கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீட்கள். வீண் வதந்திகள் வரத்தான் செய்யும். மூத்த கலைஞர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். சம்பளம் உயரும்.

விவசாயிகளே! பக்கத்து நிலத்துக் காரருடன் பாந்தமாக பழகுங்கள். வரப்புச் சண்டைகள் வேண்டாம். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள்.

இந்த நந்தனப் புத்தாண்டு வீண் செலவுகளையும் மனை உளைச்சல்களையும் கொடுத்து வந்தாலும் உங்களின் வளர்ச்சி பணிகள் தொய்வில்லாமல் தொடர்வதாக அமையும்.

பரிகாரம்:
ஸ்ரீயோக பைரவர். தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil