Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

த‌மி‌ழ்‌ப் பு‌த்தா‌ண்டு ரா‌சி பல‌ன் : கடகம்

த‌மி‌ழ்‌ப் பு‌த்தா‌ண்டு ரா‌சி பல‌ன் : கடகம்
, சனி, 21 ஏப்ரல் 2012 (19:11 IST)
FILE
தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு, சம்பாத்யம் இவையுண்டு, தானுண்டு என்றில்லாமல் சுற்றம்-நட்புக்காகவும் உழைப்பீர்கள். பத்து ரூபாயை பையில் வைத்துக் கொண்டு பத்தாயிரம் ரூபாய் பொருளை விலைபேசுமளவிற்கு சாதுர்யமானவர்கள். சாம்பார் முதல் சாட்டிலைட் வரை அனைத்தையும் அறிந்து வைத்திருப்பீர்கள். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை யூகித்துணரும் ஆற்றல் உங்களிடம் உண்டு. யார்க்கும் அஞ்சாமல் அடிமனசில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே செய்து முடிக்கும் நீங்கள், மனசாட்சியை முக்கிய சாட்சியாக நினைப்பவர்கள். ஒரு குடும்பத்தையோ, இயக்கத்தையோ வழிநடத்திச் செல்லும் தலைமைப் பண்பு உள்ளவர்கள் நீங்கள்தான்.

உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் இந்த நந்தன ஆண்டு பிறப்பதால் எதையும் சாதித்துக் காட்டும் வல்லமைப் பெறுவீர்கள். உங்களையும் அறியாமல் உங்களை அழுத்திக் கொண்டிருந்த அலட்சியப் போக்கு விலகும். குடும்பத்தாருடன் மனம் விட்டுப் பேச முடியாதபடி வேலை வேலையென்று ஓடிக் கொண்டிருந்தீர்களே! இனி அவர்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேர்வீர்கள். கணவன்-மனைவிக்குள் சின்ன சின்ன சண்டைகள் இருக்கத்தான் செய்யும் அதையெல்லாம் பெரிதாக்க வேண்டாம். பழைய கடனை பைசல் செய்வீர்கள். உங்களுக்குள்ளே தன்னம்பிக்கை, தைரியம் பிறக்கும். தொலை நோக்கு சிந்தனை அதிகரிக்கும்.

வழக்குகளிலிருந்த தேக்க நிலை மாறும். வருடமுற்பகுதி சாதிக்க வைப்பதாகவும், பிற்பகுதி சிக்கனம் தேவைப்படுவதாகவும் அமையும். செவ்வாய் 2-ம் வீட்டில் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். சேமிப்புகள் கரையும். ஆனால் புது வீடு, மனை வாங்குமளவிற்கு பணமும் வரும். எவ்வளவு செய்தாலும் உடன்பிறந்தவர்கள் நம்மை புரிந்து கொள்ளவில்லையே என்று அவ்வப்போது வருந்தினீர்களே! இனி உங்களின் பாசத்தை புரிந்து நடந்து கொள்வார்கள்.

வைகாசி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் அரைகுறையாக நின்று போன பணிகளையும் முழு மூச்சுடன் முடிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறையுங்கள். வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். அரசுக் காரியங்கள் வெற்றியடையும். பிள்ளைகளுக்கு இசை, நடனம், இலக்கியம் போன்றவையை கற்று கொடுப்பீர்கள். அவர்களால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெருமையடைவீர்கள். நீண்ட கால லட்சியமாக சொந்த வீடு வாங்க வேண்டும் என்றிருந்தீர்கள் அல்லவா, அது இப்பொழுது நிறைவேறும். குடியிருக்கும் வீட்டில் கூடுதலாக ஒரு அறை அல்லது தளம் கட்டுவீர்கள்.

17.5.2012 முதல் வருடம் முடியும் வரை குரு பகவான் லாப வீட்டில் அமர்வதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். ஷேர், ஸ்பெக்குலேஷன் மூலமாக பணம் வரும். இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிட்டும். எதிரிகள் உதிரியாவார்கள். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வி.ஐ.பிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளுமளவிற்கு பிரபலமாவீர்கள். இழந்த கௌரவத்தை மீண்டும் பெறுவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும்.

மாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். சொத்து வாங்குவீர்கள். வங்கியில் கடனுதவி கிடைக்கும். நாடாளுபவர்கள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். மனைவி உடல் நிலை சீராகும். ஷேர் பணம் தரும். அரசால் ஆதாயம் உண்டு. கணவன்-மனைவிக்குள் நிலவி வந்த வீண் சந்தேகங்கள், வாக்குவாதங்கள் நீங்கும். குலதெய்வக் கோவிலை புதுப்பிக்க வெகுநாட்களாக நினைத்துக் கொண்டிருந்தீர்களே, இப்போது நிறைவேற்றுவீர்கள். அடிக்கடி வண்டி தொந்தரவு தந்ததல்லவா! வருட முற்பகுதியில் புது வாகனம் வாங்குவீர்கள்.

11.9.2012 வரை சனி 3-ல் நிற்பதால் பெரிய திட்டங்கள் நிறைவேறும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். தூரத்து சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். கனிவாக பேசி எந்த காரியத்தையும் முடிப்பீர்கள். அடுக்கடுக்காய் வந்த செலவுகளை சமாளிக்க முடியாமல் அக்கம்-பக்கத்தில் கடன் வாங்கினீர்களே! இனி பணவரவு அதிகரிக்கும். 12.9.2012 முதல் சனி 4-ல் அமர்வதால் தாயாருக்கு நெஞ்சு வலி வந்துப் போகும். இரத்த அழுத்தம் அதிகரிக்கும். அவருடன் விவாதங்கள் வந்துப் போகும். அன்பாக பேசுகிறார்கள் என்று ஆபத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் இருந்த பின்னடைவு நீங்கும்.

குலதெய்வ கோவிலை புதுப்பிக்க முற்படுவீர்கள். உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள், அலைச்சல்கள் ஏற்படும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். ஒரு சொத்தை காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனுக்குடன் செலுத்தி விடுங்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். பொய் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும் தவிர்க்கப்பாருங்கள். முன்பின் அறியாதவர்கள் சிலர் உங்களிடம் நயமாகப் பேசினால் தன் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வருங்காலத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு உண்டு.

2.12.2012 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 10-ம் வீட்டில் கேது நீடிப்பதால் நெருக்கமான ஒருவரை இழக்க நேரிடும். உத்யோகத்தில் போராடி முன்னேறுவீர்கள். 2.12.2012 முதல் ராகு 4-ம் வீட்டிற்கு வருவதால் கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வேற்றுமதத்தவர், இனத்தவர்களால் உதவிகள் உண்டு. கடந்த கால கசப்பான அனுபவங்களை நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம்.

கன்னிப்பெண்களே! எதிர்பார்த்தபடி நல்ல இடத்தில் வரன் அமையும். வைகாசி, தை மாதத்தில் கல்யாணம் நடக்கும். தாயாரை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். உயர்கல்வியில் விடுபட்ட பாடத்தை எழுதி வெற்றி பெறுவீர்கள். மாதவிடாய்கோளாறு, தூக்கமின்மை நீங்கும்.

மாணவ-மாணவியர்களே! உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த பாடப்பிரிவில் சேருவீர்கள். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உயர்கல்வியில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றி பெறுவீர்கள்.

வியாபாரிகளே! தொழிலை தொடரமுடியாமல் முடங்கிப் போனீர்களே! கடையை விற்று விட்டு வேற வேலையை பார்க்கலாம் என்று கூட யோசித்தீர்களே! அந்த அவலநிலையெல்லம் இனி மாறும். புதிது புதிதாக வந்த போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் திணறினீர்களே! இனி அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். புரட்டாசி மார்கழி, பங்குனி மாதங்களில் கூடுதல் லாபம் கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். கணினி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளில் இழந்த பணத்தை மீட்பீர்கள். அரசாங்கத்தால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் கோரிக்கைகளை ஏற்பீர்கள். அனுபமிகுந்த வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள்.

உத்யோகஸ்தர்களே! உப்பு சப்பில்லாத விஷயத்திற்கெல்லாம் மேலதிகாரி திட்டினாரே! மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிட்டதே! உங்களின் திறமையறிந்து புதிய பொறுப்புகளை நிர்வாகம் ஒப்படைக்கும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். 17.5.2012 முதல் 10-ம் வீட்டை விட்டு குரு விலகுவதால் நீங்கள் கேட்ட இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். வேலைசுமை அதிகரித்தாலும் விரைந்து முடிப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் அதையெல்லாம் தகர்த்தெறிவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமானாலும் உறுதியாக கிடைக்கும். பதவியுயர்வு, சம்பள உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். கணினி துறையினர்களே! பணி செய்யும் நிறுவனத்திலிருந்து விலகி, சம்பளம், சலுகைகள் அதிகமுள்ள வேலைக்கு மாறுவீர்கள்.

அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்கட்சிக்காரர்களை விமர்சிக்க வேண்டாம். தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். என்றாலும் சகாக்களிடம் நிதானமாக பழகுங்கள்.

கலைஞர்களே! உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் இறங்குவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். பெரிய நிறுவனங்களில் இருந்து புது வாய்ப்புகள் தேடி வரும். வருட பிற்பகுதியில் அரசால் கவுரவிக்கப்படுவீர்கள். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள்.

விவசாயிகளே! சொத்துப் பிரச்சனைகளை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு மகசூலை அதிகப்படுத்த முயற்சி எடுங்கள். எலித்தொல்லை, பூச்சித் தொல்லைகள் வரக்கூடும். வற்றிய கிணறு சுரக்கும். தென்னை, வாழை, சவுக்கு, பாக்கு வகைகளால் லாபமடைவீர்கள்.

ஆகமொத்தம் இந்த நந்தன வருடம் எல்லா வளங்களையும், புகழையும் அள்ளித் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்:
மாரியம்மன். வாய்ப் பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil