Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌‌னி‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : துலாம்

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2011 (14:24 IST)
தோல்வி கண்டு துவளாதவர்களே! பாகுபாடு பார்க்காமல் பழகுபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து அடுக்கடுக்காக செலவுகளையும், அலைச்சல்களையும் தந்த சனிபகவான் இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலக்கட்டங்களில் ராசிக்குள்ளேயே ஜென்மச் சனியாக அமர்கிறார். ஜென்மச் சனி என்ன செய்யப் போகிறதோ! என்றெல்லாம் அஞ்சாதீர்கள். சனிபகவான் உங்களுக்கு சுகப் பூர்வ புண்யாதிபதியாக வருவதால் நல்லதையே செய்வார். உச்சமாகி சுபத் தன்மை அடைவதால் சனிபகவான் பணவரவையும் அதிகரிப்பார்.

எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டீர்களே! ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை கூட பல முறை அலைந்து முடித்தீர்களே! இழப்புகளும், அவமானங்களும் உங்களை துரத்தியதே! இனி நிம்மதி பிறக்கும். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன ்- மனைவி ஒன்று சேர்வீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த பணமெல்லாம் வந்து சேரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஜென்மச் சனி என்பதால் உடல் ஆரோக்‌கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். நேரம் தவறி சாப்பிடுவதால் அல்சர் ஏற்படக்கூடும்.

எண்ணெயில் பொறித்த மற்றும் கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் பருமனாகும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். தோலில் நமைச்சல், எரிச்சல் வந்து நீங்கும். மனைவிவழியில் செலவுகள் வரும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் உதவி கேட்டுத் தொந்தரவு தருவார்கள். திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். இளைய சகோதரரை அனுசரித்துப் போவது நல்லது. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.

நெருங்கியவர்களாக இருந்தாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். வி.ஐ.பி.களின் நட்பால் சில காரியங்களை சாதிப்பீர்கள். பிள்ளைகளின் அலட்சியப் போக்கு மாறும். குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் கூடா நட்பு விலகும். புது வீடு, மனை வாங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்வதால் இக்காலக்கட்டத்தில் கடன் பிரச்னை, திடீர் பயணங்கள், வீண் செலவுகள், கவலைகள் வந்துச் செல்லும். வாகனத்தில் செல்லும் போதும் சாலையை கடக்கும் போதும் கவனம் தேவை.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் தனாதிபதியும ்- சப்தமாதிபதியும் செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.2011 முதல் 8.11.2012 வரை சனி பகவான் செல்வதால் இக்காலக் கட்டத்தில் திடீர் பணவரவு உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். அரசால் அனுகூலம் உண்டு. மனைவிவழியில் ஆதாயமடைவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். என்றாலும் 4.2.2012 முதல் 22.6.2012 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனிபகவான் வக்ரமடைவதால் மனைவியுடன் மோதல்கள், செலவினங்கள், சிறுசிறு நெருப்புக் காயங்கள், வாகனப் பழுது வந்து நீங்கும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.

9.11.2012 முதல் 11.12.2013 வரை மற்றும் 19.5.2014 முதல் 10.9.2014 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் திடீர் திருப்பம் உண்டாகும். சொத்து வாங்குவது, விற்பது சாதகமாக அமையும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். புது டிசைனில் ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் மாற்றம் உண்டாகும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும்.

உங்கள் 3-ம் வீட்டதிபதியும் 6-ம் வீட்டதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் 12.12.2013 முதல் 18.5.2014 வரை மற்றும் 11.9.2014 முதல் 16.12.2014 வரை உள்ளக் காலக்கட்டங்களில் முயற்சிகள் பலிதமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்‌கியம் கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். பழைய கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். என்றாலும் விபத்து, வீண் சந்தேகம், இனந்தெரியாத கவலைகள், மறைமுக எதிர்ப்புகள், வீண் பழி வந்துச் செல்லும்.

சனிபகவான் மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால் கௌரவப் பதவி வரும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் இருக்கும். 7-ம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கால் வலி, கழுத்து வலி வந்து நீங்கும். வீண் சந்தேகத்தை குறையுங்கள். சனிபகவான் 10-ம் வீட்டை பார்ப்பதால் வேலை மாறுவீர்கள். உத்‌தியோகத்தில் மரியாதை கூடும். சிலர் சுயத் தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும்.

வியாபாரத்தில் தடாலடியாக சில மாற்றங்கள் செய்வீர்கள். முதலைப் போடாமல் சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுங்கள். சிலர் நல்லதுக்கு சொல்கிறேன் என்ற பெயரில் தவறான ஆலோசனைகளை வழங்கக்கூடும். இனி கணிசமாக லாபம் உயரும். வேலையாட்கள் இனி அடிக்கடி விடுப்பில் செல்ல மாட்டார்கள். பழைய பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலியுங்கள். ஹோட்டல், கணினி உதிரி பாகங்கள், துணி வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் வளைந்து கொடுத்து போங்கள்.

உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். தடைபட்ட சம்பள உயர்வு, பதவி உயர்வு எல்லாம் இனி தாமதம் இல்லாமல ் கிடைக்கும். மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். அலுவலக ரகசியங்களை பாதுகாப்பது நல்லது. அனாவசியமாக விடுப்புகள் எடுக்க வேண்டாம். பழைய அதிகாரிகள் மாற்றப்பட்டு புது அதிகாரியால் உற்சாகம் அடைவீர்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது உஷாராக இருங்கள். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம்.

கன்னிப் பெண்களே! சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி காதல் வயப்படாதீர்கள். தடைபட்ட கல்யாணம் இனி கூடி வரும். விடுபட்ட பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறுவீர்கள். மாண வ- மாணவிகளே! அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். கணிதம், மொழிப் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். அரசுத் தேர்வில் எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண்ணுடன் வெற்றி பெறுவீர்கள். கலைஞர்களே! வீண் வதந்திகளும், கிசுகிசுக்களும் இருக்கத்தான் செய்யும். மனந்தளராமல் இருங்கள். சம்பள விஷயத்தில் அதிக கண்டிப்பு வேண்டாம்.

இந்த‌ச் சனி மாற்றம் ஓய்வு இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த உங்களுக்கு பணப்புழக்கத்தையும், மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:
திருவாரூர ்- திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள திருக்கொள்ளிக்காடு எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபொங்கு சனீஸ்வரரை திருவோணம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். முயற்சிகள் வெற்றியடையும்.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?