Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விக்ருதி வருட‌ப் பலன்கள் : கும்பம்

விக்ருதி வருட‌ப் பலன்கள் : கும்பம்
, செவ்வாய், 13 ஏப்ரல் 2010 (20:13 IST)
பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது அந்த காலம், பொங்கி எழுந்தால் தான் இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்ள முடியுமென்பதை அறிந்தவர்கள் நீங்கள். உங்கள் ராசிக்கு 2-ம் வீடான குடும்பஸ்தானத்தில் இந்த தமிழ் புத்தாண்டு பிறப்பதால் முடங்கிக் கிடந்த நீங்கள் இனி நிமிர்வீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக் கொண்டீர்களே, அந்த நிலை மாறும்.

பிரச்சனையாலும், சந்தேகத்தாலும் பிரிந்திருந்த கணவன்-மனைவி இனி சேர்வீர்கள். உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து உங்களை ஆட்டிப்படைக்கும், அலைகழிக்கும் குருபகவான் 2.5.10 முதல் உங்கள் ராசியை விட்டு விலகி 2-ம் வீட்டில் அமர்வதால் விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். களைப்பு, கோபம் விலகும். பிள்ளைகள் மனம்போன போக்கில் சென்றார்களே! இனி குடும்பச் சூழ்நிலையை புரிந்து கொள்வார்கள். சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் மனதில் வரும்.

உங்கள் ராசிநாதனான சனிபகவான் 8-வது வீட்டில் மறைந்து அஷ்டமத்துச்சனியாக இந்த வருடம் முழுக்க நீடிப்பதால் எரிச்சல், முன்கோபம், எதிலும் படபடப்பு, அவ்வப்போது சலிப்படைதல், தன்னை யாரும் மதிப்பதில்லை என்ற எதிர்மறை எண்ணம் யாவும் வந்துவிலகும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். சின்ன சின்ன விபத்துகள், பணம் கொடுத்து ஏமாறுதல், எந்த விஷயத்தையும் உடனடியாக முடிக்கமுடியாமல் போகுதல், தர்மசங்கடமான சூழ்நிலை என திணறுவீர்கள். ஆனால் உங்கள் ராசிநாதனை 2.5.10 முதல் குருபகவான் (7.11.10-20.11.10 தவிர) பார்த்துக் கொண்டே இருப்பதால் கெடுபலன்கள் குறையும். இடைவிடாத முயற்சியால் இலக்கை எட்டிப்பிடிப்பீர்கள்.

வருடம் பிறக்கும்போது கேதுபகவான் 5-ம் வீட்டில் இருப்பதால் சில நாட்களில் தூக்கமில்லா மல் போகும். தாய்வழி உறவினர்கள் உதாசீனப்படுத்தக் கூடும். பூர்வீகச் சொத்தில் பிரச்சனைகள் வந்து நீங்கும். ஆனால் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வழிபாடுகளில் ஆர்வம் பிறக்கும். ராகுபகவான் லாப வீட்டில் தொடர்வதால் எதிர்பாராத பணவரவு, வி.ஐ.பிகளால் ஆதாயம், வெளிநாட்டில் வேலை என நல்லது நடக்கும்.

வியாபாரத்தில் வைகாசி, புரட்டாசி, ஐப்பதி, கார்த்திகை மாதங்களில் நல்ல லாபம் உண்டு. பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். ஏற்றுமதி, இறக்குமதி, உணவு, கெமிக்கல், பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் பெருகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் தொந்தரவு கொடுத்தாலும் நிதானத்தை தவறவிடாதீர்கள்.

உத்யோகத்தில் உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத்தெறிவீர்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்தும் கிடைக்காமல் போன பதவியுயர்வு வைகாசி, கார்த்திகை மாதங்களில் கிட்டும். வழக்கில் வெற்றியடைவீர்கள். இழந்த சலுகைகளை பெறுவீர்கள். சக ஊழியர்களை அன்பால் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவீர்கள்.

கலைஞர்களே! ஒதுங்கியிருந்த நீங்கள் இனி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். பரிசு, பாராட்டு கிடைக்கும். புது வாய்ப்புகளால் பேசப்படுவீர்கள்.
கன்னிப்பெண்களே! கசந்த காதல் இனிக்கும். நினைத்தபடி கல்யாணம் முடியும். வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.

மாணாக்கர்களே! கெட்ட நண்பர்களை அறவே ஒதுக்கிவிட்டு படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கவிதை, கட்டுரைப்போட்டிகளில் முதலிடம் பிடிப்பீர்கள். ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும்.

இந்த புத்தாண்டு திரைமறைவு வாழ்க்கையில் இருந்த உங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதாக அமையும்.

பரிகாரம் :

திருச்சி - சமயபுரத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீமாரியம்மனை பரணி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று விளக்கேற்றி வணங்குங்கள். திருந்தி வாழும் கைதிகளுக்கு உதவுங்கள். செல்வம் பெருகும்.

Share this Story:

Follow Webdunia tamil