Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கும்பம்:

Webdunia
செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (20:41 IST)
webdunia photoWD
கர்மத்தால் வந்தவற்றைத் தருமத்தால் தொலைக்க வேண்டும் என்ற பழமொழியை அறிந்த நீங்கள், முற்பிறவி சூட்சுமத்தை உணர்ந்து, இப்பிறவியில் எந்த பழிபாவமும் வராதபடி தர்மத்தின் வழியில் செல்லுவீர்கள்.

இதுவரை உங்கள் ராசியில் நின்ற ராகுவும், ராசிக்கு ஏழாம் வீட்டில் நின்ற கேதுவும் உங்களை பல வழிகளில் வாட்டி வதைத்தனர். இப்பொழுது 9. 4. 2008 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் உங்களுக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பார்ப்போம்.

இராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசியில் அமர்ந்துகொண்டு எப்போது பார்த்தாலும் கால் வலி, காது வலி, தலை வலி, தலை சுற்றல் என புலம்பித் தவிக்க வைத்த ராகு பகவான் இப்பொழுது பனிரெண்டாம் வீட்டிற்கு வந்தமர்வதால் நோய் நீங்கும், உற்சாகம் ததும்பும். இளமை, அழகு கூடும். இனி எப்போதுமே முகத்தில் மகிழ்ச்சி பொங்கும். விலகிச் சென்றவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். சிலருக்கு பரிதாபப்பட்டு நீங்களே சிக்கலில் மாட்டிக் கொண்டீர்களே! அந்த பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். 9. 4. 2008 முதல் 10. 6. 2008 வரை அவிட்டம் 3, 4ம் பாதத்தினர் கொஞ்சம் கவனமாக செயல்படுவது நல்லது. மன உளைச்சல், வீண் சந்தேகம் வரக்கூடும்.

11. 6. 2008 முதல் 21. 4. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிப் பொங்கும். கணவன் - மனைவியிடையே பாசப்பிணைப்பு அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்கள் விலகும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். கோவிலுக்குச் சென்று வருவீர்கள். வெளியூர் பயணங்களால் மன நிம்மதி அடைவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். பிரபலங்களின் நட்புக் கிட்டும். பிள்ளைகளின் நீண்ட நாள் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர்கள். தூரத்து உறவினர்களின் வருகை உண்டு. வீட்டில் சுப காரியங்கள் ஏற்பாடாகும். கடன் கொடுத்தவர்களிடம் இருந்து வட்டியுடன் பணம் கைக்கு வந்து சேரும். வழக்குகளில் வெற்றிக் கிட்டும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். அரசால் ஆதாயம் உண்டு. அரசாங்க அதிகாரிகள் பொறுப்புணர்ந்து நடந்துக் கொள்வார்கள். 22. 4. 2009 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. அலைச்சலும், செலவுகளும் நீங்கும். செலவுகளை குறைத்து சிக்கனத்தைக் கையாளுவீர்கள்.

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்களை உங்களின் திறமையால் வெல்வீர்கள். பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். கடையை மாற்றம் செய்வீர்கள். விலகிச் சென்ற வேலையாட்கள் மீண்டும் உங்களிடமே வந்து சேர்வார்கள். கூட்டுத் தொழிலில் புது முதலீடுகளை செய்வீர்கள். ஏற்றுமதி - இறக்குமதியால் அதிக லாபம் வரும். விலகிச் சென்ற பங்குதாரர்கள் அவர்களின் தவறை உணர்ந்து மீண்டும் வருவார்கள்.

உத்யோகத்தில் புதிய கண்டுபிடிப்புகளால் மேலதிகாரியின் பரிசையும் பாராட்டையும் பெறுவீர்கள். உயரதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும். பதவி உயர்வுக் கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். கணிணி துறையில் இருப்பவர்களுக்கு அயல்நாட்டு நிறுவனத்தின் வாய்ப்புக் கிடைக்கும்.

கேதுவின் பலன்கள் அடு‌‌த்த ப‌க்க‌த்‌தி‌ல்...

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு ஏழாவது வீட்டில் இருந்துக் கொண்டு பிரச்சனைகளின் உச்சிக்கே கேது அழைத்துச் சென்றாரே! மனைவியைப் பிரிந்து வாடினீர்களே! ஆத்திரத்தால் நிம்மதியை இழந்தீர்களே!

9. 4. 2008 முதல் 15. 12. 2008 முடிய உள்ள காலகட்டங்களில் உங்களின் தோற்றப்பொலிவு கூடும். கையில் காசு, பணம் புரளும். பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வீர்கள். குடும்பத்தில் மதிக்கப்படுவீர்கள். கடன் பிரச்சனைகள் தீரும். ஆறில் வந்திருக்கும் கேது அத்தனைக் கடனையும் தீர்த்துவிடும் அளவிற்கு வருமானத்தை அதிகம் தருவார். வீடு, மனை வாங்குவதற்கு புதிய வங்கிக் கடன் வாங்குவீர்கள். ஆரோக்கியம் அதிகரிக்கும். கனவுத் தொல்லை, தூக்கமின்மை நீங்கும். எத்தனையோ கோவில்கள் ஏறி இறங்கியும் திருமணத் தடை நீங்க வில்லையே என கவலைப்பட்டவர்களுக்கு தடை நீங்கி திருமணம் நடைபெறும். வெளிநாடு செல்லும் வாய்ப்புக் கிடைக்கும்.

16. 12. 2008 முதல் 25. 8. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் எதிலும் வெற்றியே கிட்டும். பணப் பிரச்சனை அகலும். வழக்குகளில் புத்தி சாதுர்யத்துடன் பேசி வெற்றியடைவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எப்போதுமே டென்ஷனாக பேசிய நீங்கள் இனி பாசத்துடன் பேசுவீர்கள். உயர் ரக ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். கௌரவ பதவிகள் தேடி வரும். வெளிவட்டாரத்தில் வி. ஐ. பி.க்களின் தொடர்பு அதிகரிக்கும்.

பரிகாரம்:

திருவண்ணாமலை, செஞ்சி அருகிலுள்ள மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியை வணங்குங்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?