Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிதுனம்:

Webdunia
செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (20:30 IST)
webdunia photoWD
எப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழவேண்டும் என்று வரைமுறைப்படுத்தி வாழும் நீங்கள், வெள்ளையுள்ளமும், வெளிப்படையாக பேசும் குணமும் கொண்டவர்கள்.

9. 4. 2008 முதல் 27. 10. 2009 வரை உள்ள காலத்தில் சாயாக் கிரகங்களான ராகுவும் கேதுவும் உங்களை என்ன செய்யப்போகிறார்கள் என்று பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதில் அமர்ந்து கொண்டு ஒரு காசும் கையில் தங்கவிடாமல் துடைத்தெடுத்த ராகு பகவான், இப்பொழுது எட்டில் சென்று மறைகிறார். படமெடுத்தாடும் பாம்பு எட்டில் மறைவதால் அலைபாய்ந்து அல்லல் பட்ட உங்கள் மனம் இனி பக்குவப்படும். கால் வலி, தலை வலி, நெஞ்சு வலி என்று சொல்லிக் கொண்டிருந்த உங்கள் தந்தையின் உடல் நலம் சீராகும். தந்தை வழி சொத்தில் இருந்த சிக்கல் தீரும். உங்களிடம் பணத்தை வாங்கி ஏமாற்றியவர்கள் இனி திருப்பித் தருவார்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அசைவ, கார உணவுகளை தவிர்த்துவிடுவது நல்லது. 6. 12. 2008 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலகட்டத்தில் ராகுவுடன் குரு சேர்வதால் விபரீத ராஜயோகம் உண்டாகும்.

குழப்பங்கள், அலட்சியப்போக்கு மாறும். கணவன் - மனைவிக்குள் சின்ன சின்ன விவாதங்கள் வந்து நீங்கும். ஒருவரையொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வீண் சந்தேகங்களை தவிர்க்கப்பாருங்கள். மனைவி வழி உறவினர்களால் அலைச்சலும், செலவுகளும் அதிகரிக்கும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பையில் கட்டி வந்து நீங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். குடும்ப சூழ்நிலையைப் புரிந்து நடந்து கொள்வார்கள். கடினமான பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள்.

நல்ல காற்றோட்டம், வெளிச்சம், தண்ணீர் வசதி உள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். செல்போனில் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்க வேண்டாம். ஷேர், புரோக்கரேஜ், கமிசன் வகைகளால் லாபம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்களை சிலர் விமர்சனம் செய்வார்கள். அதனால் உங்கள் புகழ் கூடும். அக்கம்பக்கம் வீட்டாரிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம்.

வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் அவற்றை எல்லாம் உங்களின் திறமையால் வெல்வீர்கள். வேலையாட்கள் முழு ஒத்துழைப்பு தருவார்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கும். புது ஏஜென்சி எடுத்து நடத்துவீர்கள். உத்யோகத்தில் கடினமாக உழைத்து அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அயல்நாட்டு தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து புது வாய்ப்புகள் தேடி வரும். 15. 9. 2008 முதல் 21. 4. 2009க்குள் நவீன மின்னணு சாதனங்கள், ஆபரணங்கள் வந்துசேரும்.


கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அமர்ந்து கொண்டு தைரியத்தையும், விடாமுயற்சியையும் தந்த கேது பகவான் இப்போது இரண்டாவது வீட்டில் நுழைகிறார். முன்னுக்குப் பின் முரணாக பேசி வந்த சகோதர, சகோதரிகள் இனி உங்களை அனுசரித்துப் போவார்கள். சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். உங்களை குறை கூறியவர்களுக்கு பதிலடி கொடுப்பீர்கள். தரக்குறைவாக பேசியவர்கள் மனம் திருந்தி வந்து மன்னிப்புக் கேட்பார்கள். பல் வலி, கண் எரிச்சல்கள் வந்து நீங்கும். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். மகளின் திருமணப் பேச்சு வார்த்தையிலிருந்த சிக்கல்கள் நீங்கி திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களின் உதவியால் மகனுக்கு நல்ல உத்யோகம் கிடைக்கும்.

விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளப் பாருங்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 16. 12. 2008 முதல் 25. 8. 2009 முடிய உள்ள காலத்தில் திடீர் பணவரவு, செல்வாக்கு பெருகும். மாணவ, மாணவிகளே! அதிகாலையில் எழுந்துப் படியுங்கள். விடைகளை எழுதி பாருங்கள். 26. 8. 2009 முதல் 27. 10. 2009க்குள் அரசால் அனுகூலம் உண்டாகும்.

பரிகாரம்:

மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மனையும் உடனுறை ஸ்ரீ சொக்கநாதரரையும் நேரில் சென்று வணங்குங்கள்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments