Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செ‌ல்ல‌ப் ‌பிரா‌ணிக‌ள் சொ‌ல்ல வருவது எ‌ன்ன?

செ‌ல்ல‌ப் ‌பிரா‌ணிக‌ள் சொ‌ல்ல வருவது எ‌ன்ன?
, புதன், 6 ஜூலை 2011 (20:05 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: வீட்டில் பசு வளர்ப்பது அல்லது செல்லப் பிராணிகள் நாய், பூனையை வளர்க்கிறார்கள். இதற்கெல்லாம் கூட, நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி பறவைகளுக்கான காரணங்கள்தானா அல்லது வேறுபட்ட காரணங்கள் இருக்கிறதா?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: பசுவை வளர்க்கிறோம் என்றால், கிட்டத்தட்ட நாம் புண்ணிய ஆத்மாகவே ஆகிவிடுகிறோம் என்று சொல்லலாம். ஏனென்றால் பசு தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்வதில்லை, அனைவருக்கும் கொடுக்கக்கூடியது. தாயில்லா குழந்தைகளுக்கும் தன் உணவு மூலம் தாயாகிறது. இந்து சாஸ்திரப்படி பசுவினுடைய முழு உருவத்திலும் தேவர்கள், மூவர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், சிவன், பிரம்மா, விஷ்ணு உள்ளிட்ட மூவர்களும் குடிகொண்டிருப்பதாக ஐதீகம். பசுவின் பின்புறம் லட்சுமி குடிகொண்டிருப்பதாக ஐதீகம். அதனால்தான் அனைவரும் பசுவின் பின்னால் தொட்டுக் கும்பிடுவார்கள்.

ஒரு குடும்பத் தலைவனுக்கு, குடும்பத்தில் உள்ள அங்கத்தினருக்கு வரக்கூடியதை உடனடியாக கண்டுபிடித்து, அந்தப் பிரச்சனையில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கு எச்சரிக்கை விடுக்கக்கூடிய சக்தி பசுவிற்கு உண்டு. குடும்பத்தில் ஒரு பிரச்சனையோ, துர்மரணமோ அல்லது பொருள் இழப்போ அல்லது களவோ நடக்கயிருந்தால் பசுவின் கண்ணில் இருந்து தண்ணீர் வர ஆரம்பிக்கும். இடது கண்ணில் இருந்து வந்தால் உடனடிப் பிரச்சனை என்று அர்த்தம். வலது கண்ணில் இருந்து கண்ணீர் வந்தால் ஒரு வாரம், 10 நாட்களில் பிரச்சனை வரப்போகிறது என்று அர்த்தம். இ‌தி‌லிரு‌ந்து பசு நமக்கு எதோ தெரிவிக்கிறது என்று புரிந்துகொள்ளலாம். அதனால் பசுவின் கண்ணில் இருந்து தண்ணீர் வந்தால் உடனடியாக நாம் உஷாராகிவிட வேண்டும். வீட்டில் ஏதோ பெரும் சண்டை நிகழலாம் அல்லது திடீர் தற்கொலை நிகழலாம் அல்லது பேரிழப்பு உண்டாகும். அதைத்தான் அது அறிவுறுத்தும். தவிர, தொழுவத்தை விட்டு ஓடுகிறது அல்லது தொழுவத்திற்கே வரமறுக்கிறது என்றால் நில அதிர்வு வரப்போகிறது என்று அர்த்தம்.

அதேபோல, நாய் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு ஊளையிட்டால் கண்டிப்பாக யாரோ இறக்கப் போகிறார்கள் என்று அர்த்தம். அதிலும் ஜாமம் முடியும் நேரத்தில் - சந்தியா வந்தன காலகட்டம் என்று சொல்வது - அதாவது காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பு, பிறகு மதியம் உச்சி வேளை, அதன்பிறகு சாயங்காலம், அதற்கடுத்து நள்ளிரவு என்று தொடர்ந்து ஊளையிட்டால் பெரிய மரணம், திடீர் மரணம் நிகழப் போகிறது என்று சொல்லலாம்.

அதற்கடுத்து, பூனை சுழன்று சுழன்று கத்தும், அலறி அலறி கத்தும், அதுபோல செய்தால் வீட்டில் ஏதோ பாதிப்பு வரப்போகிறது அல்லது விபத்து வரப்போகிறது என்று அர்த்தம். கூட்டுக் குடும்பமாக இருப்பவர்கள் பிரியப் போகிறார்கள் என்றும் அர்த்தம். இதுபோன்றெல்லாம் வளர்ப்பு பிராணிகள் நமக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகும்.

மனிதர்கள்தான் சாப்பிடும் உணவிற்கு தகுந்தமாதிரி நன்றியுணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால், விலங்கினங்கள் அவைகளே அறியாமல் நம்மை எந்த அளவிற்கு காப்பாற்றலாம் என்று செயல்படுகிறது. அவைகளுக்கு மனதில்லை என்று சொல்கிறோம், ஆனால் அவைகள் மனதில்லாமல் நமக்கு இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil