Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கு‌ளிகை எ‌ன்றா‌ல் எ‌ன்ன?

கு‌ளிகை எ‌ன்றா‌ல் எ‌ன்ன?
, வெள்ளி, 3 ஜூன் 2011 (20:08 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌‌னியா.கா‌ம்: நமது நாட்காட்டியில் குளிகை என்று ஒன்று இருக்கிறது. ராகு காலம், எமகண்டத்தில் என்ன செய்யக் கூடாது என்பது தெரியும். ஆனால் இந்தக் குளிகை என்றால் என்ன? என்னவெல்லாம் செய்யக் கூடாது? எந்த நேரத்தில் குளிகையை பார்க்க வேண்டும்?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: பொதுவாக குளிகை என்பதில் ஈமச்சடங்கு செய்யக் கூடாது. இதுவும் ராகு காலம், எமகண்டம் போன்றதுதான். குளிகன் என்றால் சனியின் மைந்தன் என்று சொல்வார்கள். ராகு காலத்தை ராகுவிற்கும், எமகண்டத்தை கேதுவிற்கும் சொல்வது போல, குளிகனை சனியின் மைந்தன் என்று சொல்வார்கள்.

அதாவது சனியின் ஆதிக்க நேரம் அது. அந்த நேரத்தில் சுப நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக சனிப் பிணம் துணை தேடும் என்று சொல்வார்கள். குறிப்பாக குளிகை காலத்தில் இறந்தாலோ, குளிகை காலத்தில் ஈமச்சடங்கு செய்தாலோ அடுத்ததாக ஒரு இழப்பை சந்திக்க நேரிடும். அதனால்தான் அந்த காலகட்டத்தில் இதுபோன்றவைகளை செய்யக் கூடாது என்று சொல்வார்கள். பொதுவாகவே குளிகை காலத்தை தவிர்ப்பது நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil