Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பத்திரிக்கையாளராக எந்த இராசிக்காரர் பிரகாசிப்பார்?

பத்திரிக்கையாளராக எந்த இராசிக்காரர் பிரகாசிப்பார்?
, புதன், 28 ஏப்ரல் 2010 (20:55 IST)
கே‌ள்‌வி: இந்தந்த ராசிக்கார்கள் இந்தந்த தொழில் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள் இல்லையா? அதுபோல, எந்த இராசிக்காரர் சிறந்த பத்திரிக்கையாளராக பிரகாசிப்பார் என்று ஒரு கேள்வி தோன்றியது...

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

சாதாரணமாகப் பார்த்தீர்களென்றால் பத்திரிக்கைக்கு உரிய கிரகம் புதன். எழுத்து என்றால் அது புதன்தான். காகிதம் மற்றதெல்லாம் எடுத்துக் கொண்டீர்கள் என்றால் குரு வந்துவிடுவார். அச்சு எந்திரங்கள் எல்லாம் பார்த்தீர்களென்றால் சனி பகவான் வந்து விடுவார். இதில் பிரசண்டேஷன் பவர் என்பது சந்திரன். நிகழ்ச்சியை வந்து தொகுத்து கொண்டுபோய் பிரசண்ட் செய்வது என்பது சந்திரன். தொகுத்தல், எதிர் கேள்வி கேட்டல், விமர்சித்தல் இதெல்லாம் புதன். புதன் வலுவாக இருந்தால்தான் பத்திரிக்கைத் துறையில் பிரபலம் அடைய முடியும்.

புதனுக்கு வணிகன், கூவ வணிகள் என்று பெயர் உண்டு. கூவ வணிகன், வணிகன் என்பது யார்? சமூகத்தில் மக்கள் தேவைகளை அறிந்து அதற்கு ஏற்றவாறு கொள்முதல் செய்து காப்பாற்றுதல். இந்தச் சூழ்நிலைக்கு எந்த மாதிரியான எண்ணங்கள் வேண்டும், சிந்தனை வேண்டும். எந்த விவரத்தைக் கூறினால் மக்கள் ஆர்வமாக செவி சாய்ப்பார்கள் போன்ற எண்ணம் வணிகனுக்கு உண்டு. அதாவது புதனுக்கு உண்டு. புதனுக்கு ஒற்றன் என்று ஒரு பெயரும் உண்டு.

சில பத்திரிக்கையாளர்களெல்லாம் சில பிரச்சனைக்குரிய நபர்கள், காவல் துறையால் சந்திக்க முடியாத நபர்களையெல்லாம் போய் சந்தித்துவிட்டு வந்து அவர்களிடம் பேட்டி வாங்கி அதை ஊடகங்களில் வெளியிடுவதெல்லாம் பார்க்கிறோம். இந்த மாதிரியான ஒற்று வேலைகள் பார்த்தல் இதெல்லாம் உண்டு. மேலும் புதனுக்கு தூதன் என்று ஒரு பெயரும் உண்டு. இந்த தூது போகுவதும் பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு பிரதான பணியாக இருக்கிறது. இப்ப, இரண்டு பேர் மோதிக் கொள்கிறார்கள், நடுவில் அரசு எந்திரம் செயல்பட முடியாமல் போகிறது.

அப்பொழுது மோதலுக்குள்ளானவர்கள் நீங்கள் யாரும் வரக்கூடாது, அவர்களை வேண்டுமானால் அனுப்பி வையுங்கள் என்று சொல்கிறார்கள். இதுபோன்று இருவருக்கும் சமாதான தூதுவராகவும் போகிறார்கள். இதுபோன்று தூதனாகவும், ஒற்றனாகவும், மக்களுடைய தேவைகள் என்னவென்று புரிந்துகொள்ளக் கூடியதாகவும் இத்தனை அவதாரங்களையும் எடுக்கக்கூடிய சக்தி புதனுக்கு மட்டும்தான் உண்டு. இந்த புதன் ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டும். அதுவும் 10வது இடத்தில் புதன் இருந்தால் தலைசிறந்த பத்திரிக்கையாளராக வருவர்.

நேர் காணலிலோ அல்லது எதிர் கேள்வி கேட்டலிலோ, விமர்சித்து கட்டுரைகளையோ, தலையங்கள் எழுதுவதிலோ அவர்களுக்கு ஈடிணையாக யாரும் வரமுடியாது. பிரதானமாக பார்க்கும் போது ரிஷப ராசி, மிதுன ராசி, கன்னி ராசி, துலாம் ராசி, விருச்சிக ராசி, மீன ராசி இதில் பத்திரிக்கையாளர்கள் அதிகம். ஏனென்றால் இந்த ராசிகளுக்கெல்லாம் புதன் எளிதாக கூடுதல் பலன் தரக்கூடியவராக வருகிறார். இந்த ராசிக்கார்களில் பிரபலமான பத்திரிக்கையாளர்களை எல்லாம் பார்க்க முடியும். எனவே புதன் நன்றாக இருந்துவிட்டால் பிரபலமான பத்திரிக்கையாளர்களாக வரமுடியும்.

Share this Story:

Follow Webdunia tamil