Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஈழப் பிரச்சனையில் இனி வரும் நிலவரங்கள் எப்படி இருக்கும்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

ஈழப் பிரச்சனையில் இனி வரும் நிலவரங்கள் எப்படி இருக்கும்?
, சனி, 23 மே 2009 (18:46 IST)
ஈழப் பிரச்சனையைப் பொறுத்த வரை இரு தரப்பிலும் வெற்றி/தோல்வியை நிர்ணயிக்க முடியாது. ஏனென்றால் இரு தரப்பினருக்கும் ஒரே ராசி. போர் நடக்கும் நாட்டிற்கு அதே ராசி என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

புலிகள் தரப்பில் தற்போது கடுமையான அழிவு ஏற்பட்டிருந்தாலும், அரசு தரப்பில் கூறுவது போல் “புலிகளை முற்றிலுமாக ஒழித்துவிட்டோம்; ஈழப் பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டத” என்ற அறிவிப்பை ஜோதிட ரீதியாக ஏற்க முடியாது. புலிகள் மீண்டும் வருவர்.

நாட்டை ஆள்பவரும் அதே ராசி, எதிர்த்து நிற்பவரும் அதே ராசியை உடையவர் என்பதால் இதனைக் கூறுகிறேன். புலிகள் தலைவர் உயிருடன் இல்லை என்று கூற முடியாது. ஜோதிட ரீதியாக தற்போது இல்லை என்றாலும், அவர் மீண்டும் வருவார்.

பிரபாகரனின் மரணம் எப்போது நிகழும்?

தற்போதைய சூழலில் அவருக்கு மரணம் நிகழக் கூடிய நேரம் ஜோதிட ரீதியாக இல்லை. படை பலம் ரீதியாக அவருக்கு இழப்புகள் ஏற்படலாம். ஆனால் அவர் உயிர் இழப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.

ஆனால் அவரைச் சார்ந்தவர்களில் ஓரிருவர் வேண்டுமானால் அவர்களின் ஜாதக பலன் படி உயிரிழக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil