Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கு: புதிய ஆடியோவை வெளியிட்ட யுவராஜ்

விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கு: புதிய ஆடியோவை வெளியிட்ட யுவராஜ்
, ஞாயிறு, 8 மே 2016 (12:54 IST)
டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கில் புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் கோகுல் ராஜ் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் யுவராஜ்.


 
 
கடந்த ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி  நாமக்கல்லில் ரயில்வே இருப்புப்பாதையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பொறியியல் பட்டதாரி கோகுல் ராஜ் கொலை வழக்கில்  தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உட்பட பலரை கைது செய்தனர் காவல் துறையினர்.
 
இந்த வழக்கை வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக தலைமறைவாக இருந்த யுவராஜ் அடிக்கடி வாட்ஸ் அப் மூலம் ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
 

நன்றி: News7
 
இந்நிலையில் யுவராஜ் புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதில் டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா வழக்கில், அரசியல்வாதிகளுக்கு, சிபிசிஐடி காவலர்கள் கூலிப்படையினர் போல் செயல்படுவதாகவும், உண்மையை மூடி மறைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தானுக்கான நிதியை நிறுத்தியது அமெரிக்கா: நாடாளுமன்றம் ஒப்புதல்