Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி மாணவி குளிக்கும்போது வீடியோ எடுத்த சென்னை இளைஞர்: போலீஸ் அதிரடி நடவடிக்கை..!

Webdunia
சனி, 23 டிசம்பர் 2023 (07:31 IST)
சென்னையில் கல்லூரி மாணவி குளிக்கும் போது ஜன்னல் வழியாக வீடியோ எடுத்த இளைஞரை கைது செய்து விசாரணை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னை ராயபுரம் பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர் தனது வீட்டில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது ஜன்னல் வழியாக ஒரு இளைஞர் செல்போனில் வீடியோ எடுத்ததாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவி உடனடியாக தங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் கூற, அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதனை அடுத்து போலீசாரிடம் அந்த நபர் ஒப்படைக்கப்பட்ட போது அவரது பெயர் விக்னேஷ் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் அந்த பெண்ணின் வீட்டிற்கு கீழ் தளத்தில் தான் வசித்து வருகிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து போலீசார் விக்னேஷை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கீழ் வீட்டில் உள்ள ஒருவரே கல்லூரி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த சம்பவம் ராயபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments