Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடி காரில் வந்து மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் கைது..!

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2023 (14:44 IST)
சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு ஆடி காரில் வந்து இளைஞர் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நிலையில் அவரை கையும் களவுமாக போலீசார் பிடித்துள்ளனர்  

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது/ இந்த நிலையில் காவல்துறையினர் கல்லூரி வளாகங்களில்  ரகசிய  விசாரணை செய்து வந்த நிலையில் ஆடி காரில் கஞ்சா விற்பனை செய்வது குறித்த தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து ஆடி காரில் வந்த ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தபோது கையும் களவுமாக அவரை பிடித்தனர். பிடிபட்டவர் பெயர் கடலூரை சேர்ந்த கோகுல கண்ணன் என்றும் அவரிடம் இருந்து 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு அவர் விற்பனை செய்து உள்ளதாகவும் சொகுசு காரில் சென்று நேரடியாக விற்பனை செய்வதால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை என்றும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

இடைக்கால ஜாமீன் நிறைவு..! மீண்டும் சிறைக்கு திரும்பிய கெஜ்ரிவால்..!!

விடிவதற்குள் 21 மாவட்டங்களை குளிப்பாட்ட போகும் மழை! – வானிலை ஆய்வு மையம்!

நெதன்யாகு அரசை கவிழ்ப்போம் என அமைச்சர்கள் மிரட்டல் - இஸ்ரேலில் என்ன நடக்கிறது?

இருக்கதே 25 தொகுதிதான்.. ஆனா 33 தொகுதியில ஜெயிப்பாங்களாம்! கருத்துக்கணிப்புகள் எல்லாம் டூப்! – அரவிந்த் கெஜ்ரிவால்!

காவேரி கூக்குரல் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 லட்சம் மரங்கள் நடத்திட்டம்! - அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்!

அடுத்த கட்டுரையில்
Show comments