Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வினுப்பிரியாவின் மார்ப்பிங் புகைப்படத்தை வெளியிட்ட வாலிபர் கைது

Webdunia
புதன், 29 ஜூன் 2016 (13:51 IST)
சேலத்தில் ஆசிரியையாக பணிபுரிந்த வினுப்பிரியாவின் புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டு ஆபாச படமாக ஃபேஸ்புக்கில் வெளியானதால் விரத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய ஆபாச படத்தை வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.


 

 
சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த இடங்கனசாலை புவன கணபதி தெருவைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரதுமகள் வினுப்பிரியா. தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரின் புகைப்படங்கள், மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு, பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது.
 
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வினுப்பிரியா மற்றும் அவரின் குடும்பத்தினர் காவல்துறைக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் வினுப்பிரியா அவமானம் தாங்காமல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள விவாகரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
அதைத்தொடர்ந்து வினுப்பிரியாவின் உறவினர்கள் 2 நாட்களாக மருத்துவமனையில் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தின் எதிரொலியாக காவல் துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர்.
 
அதில் ஏர்சல் நிறுவன மொபைல் எண் மூலம் ஆபாச படம் வெளியிடப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக மேற்கொண்ட தீவிர விசாரணையில் இளம்பிள்ளை அருகே உள்ள கல்பாரப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ்(22) என்பவர் தான் வெளியிட்டது என்பது தெரியவந்ததை அடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.
 
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சுரேஷ், அவர் தான் ஃபேஸ்புக்கில் மார்பிங் செய்து வெளியிட்டது என்பதை ஒப்புக்கொண்டார். மேலும் புகார் அளிக்க சென்ற வினுப்பிரியாவின் அப்பாவிடம் காவல் துறையினர் லஞ்சம் கேட்டது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும், அது உறுதியானால் அந்த காவல்துறை அதிகாரி பணி நீக்கம் செய்யப்படுவார் என்றும் காவல்துறை துணை ஆணையர் கூறினார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments