Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி வாலிபர் செய்த காரியம்!

Webdunia
சனி, 3 பிப்ரவரி 2018 (18:41 IST)
சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த 10-ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவியை அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்ற இளைஞர் ஆசை வார்த்தகளை கூறி கடத்தி சென்று திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது.
 
துரைப்பாக்கத்தை சேர்ந்த அந்த 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியிடம் அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்ற வாலிபன் அடிக்கடி சந்தித்து ஆசையாக பேசி வந்துள்ளான். இந்நிலையில் அந்த மாணவியிடம் சூர்யா ஆசை வார்த்தைகளை கூறி கடத்திச்சென்று திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
 
இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் துரைப்பாக்கம் கண்ணகி நகர் போலீசில் புகார் அளித்தார். இதனைடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் மாணவியை கடத்தி சென்ற சூர்யா பட்டினப்பாக்கத்தில் இருப்பதாக கண்டுபிடித்தனர்.
 
உடனே அங்கு விரைந்த போலீசார் சூர்யாவை கைது செய்து மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கைதான சூர்யா மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments