Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வழியில் செல்லும் பெண்களை தொடர்ந்து கேலி செய்த வாலிபர் கைது

Webdunia
புதன், 13 ஜூலை 2016 (18:05 IST)
வழியில் செல்லும் பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


 
ஈரோடு மாவட்டம், சென்னிமலை மேலப்பாளையத்தை சேர்ந்த சேர்நத சங்கர் [35] என்பவர், சென்னிமலையை அடுத்த ஈங்கூர் பகுதியில், அவ்வழியாக செல்லும் மாணவ, மாணவிகள், பெண்கள் ஆகியோரை சீண்டியுள்ளார். ஆனாலும், தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் யாரும் காவல் நிலையத்தில் புகார் தர தயங்கியுள்ளனர்.
 
இதனால், மேலும் மேலும் தொடர்ந்து, மாலை நேரங்களில் அங்கு தனியாக வரும் பெண்களிடம் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
 
இந்நிலையில், ஓட்டப்பாறையை சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணிடம், அந்த வாலிபர் தகாத செயலில் ஈடுபட முயன்றுள்ளார். அப்போது, அவர் சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர் சங்கரை பிடித்துள்ளனர்.
 
சங்கீதா அளித்த புகாரின்படி சென்னிமலை காவல் துறையினர், சங்கரை கைது செய்து பெருந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, பெருந்துறை கிளைச் சிறையில் அடைத்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

அடுத்த கட்டுரையில்