Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வழியில் செல்லும் பெண்களை தொடர்ந்து கேலி செய்த வாலிபர் கைது

Webdunia
புதன், 13 ஜூலை 2016 (18:05 IST)
வழியில் செல்லும் பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


 
ஈரோடு மாவட்டம், சென்னிமலை மேலப்பாளையத்தை சேர்ந்த சேர்நத சங்கர் [35] என்பவர், சென்னிமலையை அடுத்த ஈங்கூர் பகுதியில், அவ்வழியாக செல்லும் மாணவ, மாணவிகள், பெண்கள் ஆகியோரை சீண்டியுள்ளார். ஆனாலும், தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் யாரும் காவல் நிலையத்தில் புகார் தர தயங்கியுள்ளனர்.
 
இதனால், மேலும் மேலும் தொடர்ந்து, மாலை நேரங்களில் அங்கு தனியாக வரும் பெண்களிடம் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
 
இந்நிலையில், ஓட்டப்பாறையை சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணிடம், அந்த வாலிபர் தகாத செயலில் ஈடுபட முயன்றுள்ளார். அப்போது, அவர் சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர் சங்கரை பிடித்துள்ளனர்.
 
சங்கீதா அளித்த புகாரின்படி சென்னிமலை காவல் துறையினர், சங்கரை கைது செய்து பெருந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, பெருந்துறை கிளைச் சிறையில் அடைத்தனர்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்