Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர் சக்கரத்தில் சிக்கிய இளைஞர் - சோகத்தில் முடிந்த சித்திரை திருவிழா

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2022 (08:22 IST)
நாகை மாவட்டம் திருமருகல் அருகே கோயில் திருவிழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
நாகை மாவட்டத்தில் திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. உத்திராபதிஸ்வரர் ஆலய ஆண்டு திருவிழாவில் தேரோட்டம் நள்ளிரவு நடந்துள்ளது. தேர் திரும்புகையில் சக்கரத்தில் சிக்கி 60 அடி உயர சப்பரத்தின் சக்கரம் வயிற்றில் ஏறி இறங்கியதில் இளைஞர் ஒருவர் இறந்துள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
சமீபத்தில் தஞ்சை அருகே களமேடு என்ற பகுதியில் சித்திரை தேரோட்ட விழா நடைபெற்றபோது திடீரென மின்சாரம் ஷாக் அடித்து 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கும் தஞ்சை மாநகராட்சியில் வேலை வழங்கப்படும் என தஞ்சை மேயர் உறுதி அளித்துள்ளார். ஏற்கனவே அதிமுக திமுக மற்றும் தமிழக அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி செய்துள்ளது என்பது தெரிந்ததே. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments