Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுகுடிக்க பணம் தராததால் அண்ணனை கொலை செய்த தம்பி

Webdunia
திங்கள், 18 மே 2015 (22:19 IST)
மதுகுடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த அண்ணன் தலையில் அம்மிக்கல்லை போட்டு தம்பி கொலை செய்துள்ளார்.
 
காஞ்சிபுரத்தை அடுத்த ஒரிக்கை அன்னை சத்யா நகரில் வசிப்பவர் லோகநாதன் (35). இவரது தந்தை இறந்து விட்டார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் இவரது தாய் மற்றும் சகோதரர் பாலகிருஷ்ணன்(32) இவருடனேயே வசித்து வந்துள்ளார்.
 
வேலை இல்லாமல் ஊரை சுற்றி வந்த தம்பி பாலகிருஷ்ணன் அடிக்கடி மது அருந்த தாயிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தனது தாயிடம் பாலகிருஷ்ணன் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார்.
 
இதை பார்த்த லோகநாதன் குடிப்பதற்கு பணம் கொடுக்கக்கூடாது என்று தாயிடம் கூறியுள்ளார். மேலும், தம்பியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே நேற்று இரவு கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.
 
பின்னர் லோகநாதன் தனது குழந்தைகளுடன் தூங்கச் சென்று விட்டார். ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் அதிகாலை 3 மணிக்கு வீட்டில் கிடந்த அம்மிக்கல்லை எடுத்து லோகநாதன் தலையில் போட்டுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து லோகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

Show comments