Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து 2 பள்ளி மாணவிகளை கடத்தி குடும்பம் நடத்திய வாலிபர் கைது

Webdunia
திங்கள், 6 ஜூலை 2015 (21:04 IST)
அடுத்தடுத்து இரண்டு பள்ளி மாணவிகளை கடத்தி குடும்பம் நடத்தி வந்த திருமணமான வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாம்பரத்தை அடுத்த பொழிச்சநல்லூரைச் சேர்ந்த 16 வயது மாணவி, திருவள்ளூரை அடுத்த தண்ணீர்குளத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வந்து மாணவி திடீரென மாயமாகியுள்ளார்.
 
இதேபோல், கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதே பள்ளியில் படித்த தண்ணீர் குளத்தை சேர்ந்த மற்றொரு 11ஆம் வகுப்பு மாணவியும் மாயமானார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரித்து வந்தனர்.
 
இந்நிலையில் இரு மாணவிகளும், திருவள்ளூரை அடுத்த காக்களூரில் உள்ள கோபி (30) என்பவரது வீட்டில் இருப்பது தெரியவந்தது. மேலும், கடந்த 2 ஆண்டுகளாகவே கோபி, மாணவிகளை வீட்டில் சிறை வைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
 
கோபிக்கு திருமணமாகி மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது குறிப் பிடத்தக்கது. மாணவிகளுக்கு கோபி உறவினர் முறை ஆவார். மீட்கப்பட்ட மாணவி கள் இருவரும் அவர்களது பெற்றோரிடம் ஒப்ப டைக்கப்பட்டனர். கோபி மீது கடத்தல், கற்பழிப்பு உள்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

Show comments