Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒசூர் அருகே இளம் காதல் ஜோடி படுகொலை...

Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2018 (13:49 IST)
ஒசூரைச்சேர்ந்த காதல் ஜோடி அடித்துக்கொலை,செய்யப்பட்டு  உடல்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி ஆற்றில் மீட்கப்பட்டது.கொலை தொடர்பாக பெண்ணின் தந்தை உட்பட மூவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சூடுகொண்ட பள்ளியை சேர்ந்த நந்திஷ்,அதே பகுதியை சேர்ந்த சுவாதி ஆகியோர் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்டில் வீட்டை எதிர்த்து  பதிவு திருமணம் செய்துகொண்டனர். ஆனால் சில தினங்களுக்கு முன்பு இருவரும் கொலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது.
 
இன்று இவர்கள் இருவரின் உடலையும் கர்நாடக போலீஸ் மீட்ட நிலையில் குற்றவாளிகளை கிருஷ்ணகிரி போலீஸார் கைது செய்தனர்.
 
காதலர்களை கொன்று விட்டு அவர்களின் கை,கால்களை கொலையாளிகள் காவிரியில் வீசியதை போலீஸார் கண்டுபிடித்தனர்.
 
பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால் பெண்ணின் குடும்பத்தினர் இந்தக்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் விசாரிக்கின்றனர்.
 
கொலைதொடர்பாக பெண்ணின் சித்தப்பா வெங்கடேஷ்,உறவினர் கிருஷ்ணன்  ஆகியோர் கைது.
 
இருவரும், வேறு வேறு வகுப்பினர் என்பதால்தான் இந்த ஆவணக்கொலை நடந்திருப்பதாக தகவல் வெளியாகின்றன.
 
கர்நாடகா மாநிலத்திலுள்ள மாண்டியா அருகே மலஹன்பள்ளியில் உள்ள காவிரியில் காதலர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 
மேலும் கடந்த ஆக்ஸ்ட் மாதம் தான் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் வாழ விடாமல் இளம் காதல் ஜோடியை பெண்ணின் குடும்பத்தார் கொலை செய்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments